பிரியத்துக்குரிய வாசகர்களுக்கு வணக்கம்.

ங்கள் பத்திரிகை.காம் இணைய இதழில் பிரபல எழுத்தாளரும், ஜோதிடருமான வேதாகோபாலன் எளிமையான முறையில் பத்திரிகை.காம் வாசகர்களுக்காக பிரத்யேகமாகவும், துல்லியமாகவும் கணித்துள்ள குருப்பெயர்ச்சி பலன்கள் 12 ராசிகளுக்கும், அவர்களுக்குரிய நட்சத்திரம் வாரியாக வெளியிடப்படுகிறது.

முதல்கட்டமாக இன்று மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கான நட்சத்திர பலன்கள் வெளியாகிறது. தொடர்ந்து மற்ற ராசிகளுக்கான பலன்களும் அடுத்தடுத்த நாட்களில் வெளியாகும்.

குருபெயர்ச்சி – பொதுப்பலன்கள்

வாக்கிய பஞ்சாங்கத்தின்படி சார்வரி வருடம் ஐப்பசி மாதம் 30ம் தேதி (15 நவம்பர் 2020), இரவு மணி 9.48 க்கும் திருக்கணித பஞ்சாங்கத்தின்படி கார்த்திகை மாதம் 5ம் தேதி அதாவது 20 நவம்பர் 2020 அன்று ‘குரு பெயர்ச்சி‘ நிகழவிருக்கிறது.

பொதுவாக, கிரகங்கள் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறும்போது  மனிதனின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துவது உறுதி. கிரகப் பெயர்ச்சிகளில் குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி, ராகு-கேது பெயர்ச்சிகளை மிகவும் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன.

15.11.2020 அன்று நிகழவிருக்கும் முழு சுபரான குருபகவானின் பெயர்ச்சியின் காரணமாக எந்தெந்த ராசிகளுக்கு எந்தவிதமான பலன் கிடைக்கும் என்பதைப் பார்க்கலாம்.

குரு பகவான் தற்போது தனது சொந்தவீடாகிய தனுசு ராசியில் அமர்ந்திருக்கிறார்.  அவர் அங்கிருந்து மகர ராசிக்குச்  செல்லவிருக்கிறார்.

இங்கு குறிப்பிட்டுள்ள குரு பெயர்ச்சிப் பலன்கள்  ராசியின் அடிப்படையில் கோள்-சார ரீதியாக மட்டுமே சொல்லப்பட்டிருக்கின்றன. ஒருவரின் ஜாதகத்தில் நடக்கக் கூடிய தசா புத்தியைப் பொறுத்து தான் முக்கிய மற்றும் பெரும்பாலான பலன்கள் அமையும் என்பதால் அவற்றையும் ஆராய்ந்து முடிவுக்கு வருவது நல்லது.

குருபகவான் எப்போதுமே தான் அமர்ந்திருக்கும் இடத்தை விட, பார்க்கும் பார்வைக்கு தான் அதிக நற்பலன்களை அளிப்பார்  என்பார்கள். அந்த வகையில் தற்போது மகர ராசிக்கு செல்லும் குரு அந்த ராசிக்கு வழங்குவதை விட அவரின் சுப பார்வைகள் படும் ராசிகளுக்கு சிறப்பான பலன்கள் வழங்குவார்.

குரு, தான் அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து 5ம் வீடு, 7 ஆம் வீடு, 9ம் வீடு ஆகியவற்றைப் பார்ப்பது இயல்பு.

அவ்வாறாக குரு பகவானின் புனிதப் பார்வை படவிருக்கும் இடங்கள் ரிஷபம், கடகம் மற்றும் கன்னி ஆகிய ராசிகள் ஆகும்.

மகரம் என்பது குரு பகவானின் நீச வீடு ஆகும். எனவே பொதுவாகவே சுப பலன்கள் இந்த வருடம் சற்றுக் குறைவாக இருக்கும் என்பதுதான் பரவலான கருத்து. ஆனால் இதிலும் ஒரு விதிவிலக்கு உண்டு. இன்னும் சிறிது காலத்தில்.. அதாவது, 2020, டிசம்பர் 27 ஆம் தேதியன்று சனிப்பெயர்ச்சி நிகழவுள்ளது. அப்போது நீசமான குருவுடன் ஆட்சிபெற்ற சனி அமர்ந்து நீச பங்கம் அளித்து ராஜயோகமாக்கவுள்ளார்.  ஆகவே குரு பகவானின் நீசத்தன்மை குறையும். அவர் தன்னுடைய சிறப்புப்பணியாகிய திருமணம், குழந்தைப்பேறு, சுப நிகழ்ச்சிகள், பணப்புழக்கம் ஆகியவற்றை உலக மக்களுக்கு அள்ளித்தர உள்ளார்.

குடும்பத்தின் அடிப்படை வசதிகள் பெருகும். பணவரவு உண்டு. திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். ஆனால், சனி புகவான் உடன் இருப்பதால், எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.

திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் ஆகும். குழந்தை பிறக்காதவர்களுக்குக் குழந்தை பிறக்கும். பிள்ளைகள் படிப்பில் முன்னேறுவார்கள், என்று இத்தனை காலம் குரு (தனுசு ராசியில்) ஆட்சியாக இருந்தபோது சொன்னதுபோலவே இப்போதும் சொல்ல அதிக வாய்ப்புள்ளது.

எதிலும் கவனமாகச் செயல்பட வேண்டும். திருமணத்துக்காக வெளியில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். ஆனாலும் திருமணம் நல்லபடியாக முடியும். குழந்தைகளின் படிப்பு தடைப்படுவதுபோல் பயமுறுத்தி, கடைசியில் நல்லபடியாக முடியும். நிதி நிலை சரிந்து, பின் மிக நன்கு உயரும்.

உலக அளவில் சரிந்திருந்த நிதி நிலையும் வணிக வளமும் மெல்லத் தூக்கி நிறுத்தப்படும்.

நின்றுபோயிருந்த மக்களின் உழைப்பு மீண்டும் தொடரவும், அந்த உழைப்புக்கேற்ற நற்பலன்கள் அதிகரிக்கவும் மிக நல்ல வாய்ப்பு உள்ளது.

இவ்வாண்டு நிகழ உள்ள குரு பெயர்ச்சியால் அதிக நற்பலன் பெற உள்ள ராசிகள் ரிஷபம், கடகம், கன்னி, தனுசு, மீனம் ஆகியவை.

ஏனெனில் ரிஷப ராசிக்கு ஒன்பதாம் வீட்டிற்கும், கடக ராசிக்கு ஏழாம் வீட்டுக்கும், தனுசு ராசிக்கு இரண்டாம் வீட்டுக்கும் மீனத்துக்கு லாபஸ்தானமாகிய 11க்கும் வருவது சிறப்பாகும். அதோடு குரு பகவான் ரிஷபம், கடகம், கன்னி ஆகிய ராசிகளைத் தன் அருட்பார்வை கொண்டு பார்க்கவும் இருக்கிறார்.

அதற்காக மற்ற ராசிகளுக்கு நற்பலன்கள் கிடைக்காது என்ற கவலை வேண்டாம். அவர் பார்வை படும் ராசிகள் உங்களுக்கு எந்த வீடு என்று பார்த்து அதில் மேம்பாடு கிடைக்கும் என்பதை தைரியமாக நம்பலாம்.

மேஷம், மிதுனம், சிம்மம், மகரம், கும்பம், ஆகிய ராசியைச் சேர்ந்தவர்களுக்குச் சாதகமான இடத்திற்குச் செல்லாவிட்டாலும் நீசத்தன்மை பெற்றதார் அவர்களுக்கு நன்மை செய்வார்.

எனினும்.. நம் ராசிக்குச் சாதகமாக இருந்தாலும் சரி.. சுமாராக இருந்தாலும் சரி… குரு பகவானை வழிபடுதல் .. அவருக்கான பரிகாரங்கள் செய்தல் நிறைந்த வாழ்வுக்கு வகை செய்யும்.

வியாழக்கிழமை விரதம் இருத்தல், மஞ்சள் வஸ்திரம், லட்டு ஆகியவை தானம் செய்தல், குருவாயூரப்பன், ராகவேந்திரஸ்வாமி.. ஷீர்டி சய்பாபா..  மகா பெரியவர்… ஆசார்ய ஸ்வாமிகள்.. ஜீயர்.. போன்ற எந்த குருவையும் வழிபடுதல் நன்மை தரும். குரு கீதா போன்ற சுலோகங்கள்… சாயி சத் சரிதம்.. குரு சரித்ரம் போன்றவை படித்தல் அற்புத நன்மை தரும். வியாழக்கிழமைகளில் நெய்விளக்கேற்றுதல்.. நவகிரகத்தை 21 முறை சுற்றுதல்.. மூன்று நெய்விளக்கேற்றுதல், தங்க தானம் போன்றவை நிறைவான குருப்ரீதிகள் ஆகும்.

இவற்றைப் பின்பற்றி அனைவரும் நலம் பெறுவோம்.

நட்சத்திரம் வாரியாக குருப்பெயர்ச்சி பலன்கள்

அஸ்வினி (மேஷம்):

உங்களோட ராசிக்கு 9 – ம் வீட்டில் அமர்ந்து, தொட்ட காரியங்களையெல்லாம் துலங்க வைத்ததுடன், வி.ஐ.பிகள் மத்தியில் ஒரு அந்தஸ்தையும் பெற்றுத்தந்துகொண்டிருந்த குரு பகவான் உங்களோட ராசிக்கு 10 – ம் வீட்டில் நுழைந்து பலன் தரப்போறாரு.

அவர் உங்கள் ராசிக்கு 2,4,6 ஆகிய வீடுகளைப் பார்க்கவிருக்கிறார்.

பத்தாம் இடமென்றால் பதவியைப் பறித்துவிடுவாரே என்றெல்லாம் பதற்றப்படாதீங்க. ஓரளவு நன்மையே உண்டாகும். சிலருக்கு வெளிநாட்டில், அண்டை மாநிலத்தில் வேலை அமையும். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளைப் பார்க்கவேண்டி வரும்.

கணவன், மனைவி ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசுவீங்க. இருவரும் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீங்க. நவீன ரக வாகனம், செல்போன் வாங்குவீங்க. கல்யாண முயற்சிகள் பலிதமாகும். மனைவி வழியில் செல்வாக்கு உயரும். குரு 6 – ம் வீட்டைப் பார்ப்பதால் மாதக்கணக்கில் தள்ளிப்போன காரியங்களெல்லாம் நல்லவிதமாக முடியும்.

10 – ம் வீட்டில் குரு அமர்வதால் வேலைச்சுமை இருக்கும். நேரங்காலம் பார்க்காமல் உழைத்தும் எந்தப் பயனும் இல்லையே, என்று அவ்வப்போது ஆதங்கப்படுவீங்க.

ஆனால் இந்த குரு பெயர்ச்சி உங்களைச் செம்மைப்படுத்துவதற்கு உதவுவதுடன், சமூகத்தில் வளைந்துகொடுத்துப் போகும் கலையைக் கற்றுத் தருவதாக அமையும்.

விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசத் தொடங்குவாங்க. கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தைத் திருப்பித் தருவீங்க.

 பரணி (மேஷம்):

உங்களோட ராசிக்கு 9 – ம் வீட்டில் அமர்ந்து, தொட்ட காரியங்களையெல்லாம் துலங்க வைத்ததுடன், வி.ஐ.பிகள் மத்தியில் ஒரு அந்தஸ்தையும் பெற்றுத்தந்த குரு பகவான் உங்களோட ராசிக்கு 10 – ம் வீட்டில் நுழைந்து பலன் தரப்போறாரு.

அவர் உங்கள் ராசிக்கு 2,4,6 ஆகிய வீடுகளைப் பார்க்கவிருக்கிறார்.

உங்கள் திறமையையும், உழைப்பையும் வேறு சிலர் பயன்படுத்தி முன்னேறுவாங்க. எந்த விஷயங்களையும் நீங்களே நேரடியாகச் சென்று முடிப்பது நல்லது. முக்கிய கோப்புகளைக் கையாளும்போது அலட்சியம் வேண்டாம். உறவினர்களில் சிலர் மதிக்காமல் போவாங்க. யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். எதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுங்கள். விழிப்பு உணர்வு தேவைப்படும் முக்கியமான காலகட்டம்.

உங்களோட பலவீனங்களை பட்டியலிட்டு அவற்றையெல்லாம் மாற்றிக் கொள்வீங்க. சில விஷயங்களில் பெருந்தன்மையான முடிவுகள் எடுப்பீங்க. என்றாலும் அலைச்சலும், செலவினங்களும் வந்து போகும். பயணங்களால் ஆதாயம் உண்டு. ஆன்மிக விழாக்களை முன்னின்று நடத்துவீங்க.

விரும்பத்தகாத இடமாற்றங்கள் வரும். வேலையை விட்டுவிடலாமா என்ற எண்ணங்கள் வரக்கூடும். புதிய அதிகாரியால் சில நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும்.

கலைத்துறையினர் சிறிய வாய்ப்புகளாக இருந்தாலும், அலட்சியப்படுத்தாமல் பயன்படுத்துங்கள். புதிய நிறுவனங்களை நம்பி ஏமாற வேண்டாம்.

உத்தியோகத்தில் அலட்சியம் வேண்டாம். மற்றவர்களின் வேலைகளையும் சேர்த்துப் பார்க்கவேண்டி வரும். உயரதிகாரிகள் உங்களோட தவறுகளைச் சுட்டிக்காட்டினால் மாற்றிக் கொள்வது நல்லது. உங்களைவிட அனுபவம் குறைவானவர்கள், வயதில் சிறியவர்களிடமெல்லாம் நீங்கள் அடங்கிப் போக வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

கிருத்திகை 1 (மேஷம்):

உங்களோட ராசிக்கு 9 – ம் வீட்டில் அமர்ந்து, தொட்ட காரியங்களையெல்லாம் துலங்க வைத்ததுடன், வி.ஐ.பிகள் மத்தியில் ஒரு அந்தஸ்தையும் பெற்றுத்தந்த குரு பகவான் உங்களோட ராசிக்கு 10 – ம் வீட்டில் நுழைந்து பலன் தரப்போறாரு.

அவர் உங்கள் ராசிக்கு 2,4,6 ஆகிய வீடுகளைப் பார்க்கவிருக்கிறார்.

குரு உங்களோட ராசிக்கு 2 – ம் வீட்டைப் பார்ப்பதால் எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். குடும்பத்தில் நல்லது நடக்கும். குழந்தைபாக்கியம் கிடைக்கும். சொத்து சேரும். குரு 4 ம் வீட்டைப் பார்ப்பதால் தாயாருடன் இருந்த மனவருத்தம் நீங்கும். கை, கால், முதுகு வலியிலிருந்து தாயார் விடுபடுவார். வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்கும். புதிய வீட்டில் குடியேறுவீங்க.

சக ஊழியர்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். உங்களுடைய அடிப்படை உரிமைக்காக நீங்கள் போராட வேண்டியிருக்கும்.

இளம்பெண்கள் உயர்கல்வியில் கவனம் செலுத்திப் படிக்க வேண்டிய முக்கியமான காலகட்டம். எதிர்காலம் பற்றி யோசித்து முடிவெடுங்க. எந்த ஒரு முடிவையும் பெற்றோரை கலந்தாலோசிக்காமல் எடுக்காதீங்க. தடைப்பட்ட திருமணம் கூடி வரும்.

சிறிய சந்தர்ப்பங்களையும், வாய்ப்புகளையும் பயன்படுத்தி முன்னேறுவீங்க. திருமண விஷயத்தைப் பெற்றோரிடம் ஒப்படைத்துவிடுவது நல்லது. பள்ளி, கல்லூரி கால தோழியை/ தோழரைச் சந்திப்பீங்க.

கலைத்துறையினர் போராடி வாய்ப்புகளைப் பெற்றுப் பெருவெற்றி அடைவீங்க. மூத்த கலைஞர்களை அரவணைத்துப் போங்க.

மாணவ, மாணவிகள் கடைசிநேரத்தில் படித்து பாஸ் செய்வீங்க. உங்களோட தனித்திறமையை வளர்த்துக் கொள்வீங்க. சக மாணவர்களிடம் கவனமாகப் பழகுங்கள்.

கிருத்திகை 2,3,4 (ரிஷபம்):

உங்கள் ராசிக்கு 8 – ம் வீட்டில் மறைந்திருந்து எதையும் எட்டாக் கனியாக்கியதுடன், மன அழுத்தத்தையும் தந்துகொண்டிருந்த குரு பகவான் உங்கள் ராசிக்கு சௌபாக்ய ஸ்தானமாகிய வீடான 9 – ம் வீட்டில் நுழைந்து மிகுந்த நற்பலன்களை அளிக்கப்போறாரு.

அவர் உங்கள் ராசியையும், ராசிக்கு 3,5 ஆகிய வீடுகளையும் பார்க்கவிருக்கிறார்.

மனசாட்சிக்கு விரோதமாக எதையும் செய்யத் தயங்குவீங்க. வாழ்க்கை வாழ்வதற்கே என்பதை அறிந்த நீங்கள், சோதனைகளையும் சாதனைகளாக மாற்றி முன்னேறத் துடிப்பீங்க.

உங்களோட ராசிக்கு 3 – ம் வீட்டை குரு பார்ப்பதால் தன்னம்பிக்கை பிறக்கும். இளைய சகோதரர்களால் பயனடைவீங்க. விலையுயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீங்க. வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். அரசு வகையில் ஆதாயம் உண்டு.உங்களோட ராசிக்கு 5 – ம் வீட்டை குரு பார்ப்பதால் முடிவுகள் எடுப்பதில் இருந்த குழப்பம், தடுமாற்றம் நீங்கும். தடைப்பட்டுவந்த குழந்தைபாக்கியம் இனி கிடைக்கும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சாதகமாக முடியும். பாகப்பிரிவினை சுமுகமாகும்.

பழுதாகிக் கிடந்த மின்னணு, மின்சார சாதனங்களை மாற்றிப் புதிதாக வாங்குவீங்க.

பெண்களுக்கு இருந்துவந்த உடல் உபாதைகள் நீங்கும். உத்தியோகம் அமையும். சிலர் உயர்கல்விக்காக அயல்நாடு செல்வீங்க. எதிர்பார்த்தபடி நல்ல வரனும் அமைந்து திருமணம் சிறப்பாக முடியும்.

வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து முதலீடு செய்வீங்க. தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்றுத் தீரும். கொடுக்கல் வாங்கலில் சுமுகமான நிலை ஏற்படும். கடையை விரிவுபடுத்துவீங்க.

ரோகிணி (ரிஷபம்):

உங்கள் ராசிக்கு 8 – ம் வீட்டில் மறைந்திருந்து மன அழுத்தத்தையும் தந்துகொண்டிருந்த குரு பகவான் உங்கள் ராசிக்கு சௌபாக்ய வீடான 9 – ம் வீட்டில் நுழைந்து மிகுந்த நற்பலன்களை அளிக்கப்போறாரு.

அவர் உங்கள் ராசியையும், ராசிக்கு 3,5 ஆகிய வீடுகளையும் பார்க்கவிருக்கிறார்.

வாழ்வில் புதிய வியூகங்களை அமைத்து முன்னேறத் தொடங்குவீங்க. இனி தொட்ட காரியங்களெல்லாம் துலங்கும். தள்ளிப்போனதிருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுபநிகழ்ச்சிகள் இப்போது கூடி வரும். அறிவுப்பூர்வமாகவும், அனுபவப்பூர்வமாகவும் பேசத் தொடங்குவீங்க.

சுபச்செலவுகள் அதிகமாகும். அலைச்சலைக் குறைத்தது உடல்நலனில் கவனம் செலுத்துங்கள். யோகா, தியானம் கை கொடுக்கும். சிலர் புது வீடு கட்டி குடிபுகுவாங்க.

குழந்தைப் பறு இல்லாதவர்களுக்குக் குழந்தைப் பேறு உண்டாகும். மகன்/மகளின் வாழ்வில் உயர்வு ஏற்படும்

புதுத் தெம்பு பிறக்கும். காலநேரம் பார்க்காமல் உழைக்க வேண்டி வரும். முடிவுகள் எடுப்பதில் தயக்கம், தடுமாற்றம் வந்து நீங்கும். பிள்ளைகளிடம் அதிக கண்டிப்பு காட்டவும் வேண்டாம். பணத்தட்டுப்பாடு வந்து நீங்கும்.

வேலையாட்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்குவீங்க. புது ஏஜென்சி எடுப்பீங்க. ஷேர், உணவு, எண்டர் பிரைசஸ், ஜுவல்லரி, மர வகைகளால் ஆதாயமடைவீங்க. விலகிச் சென்ற பங்குதாரர் மீண்டும் வந்திணைவார்.

ஸ்டூடன்ட்ஸ், நல்ல கல்வி நிறுவனத்தில் மேற்படிப்பைத் தொடங்குவாங்க. மொழித் திறனை வளர்த்துக் கொள்வீங்க. மதிப்பெண் கூடும். கட்டுரை, பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டிகளில் பரிசு பெறுவீங்க.

மிருகசீர்ஷம் 1,2: (ரிஷபம்):

உங்கள் ராசிக்கு 8 – ம் வீட்டில் மறைந்திருந்து எதையும் எட்டாக் கனியாக்கியதுடன், மன அழுத்தத்தையும் தந்துகொண்டிருந்த குரு பகவான் உங்கள் ராசிக்கு சௌபாக்ய ஸ்தானமாகிய 9 – ம் வீட்டில் நுழைந்து மிகுந்த நற்பலன்களை அளிக்கப்போறாரு.

அவர் உங்கள் ராசியையும், ராசிக்கு 3,5 ஆகிய வீடுகளையும் பார்க்கவிருக்கிறார்.

கல்வியாளர், அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீங்க. குழந்தை பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். கணவன், மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். மனைவி உங்களோட புதிய திட்டங்களை ஆதரிப்பார். மனைவிவழி உறவினர்களும் பக்கபலமாக இருப்பார்கள்.

குரு பகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால், சோகமாக இருந்த உங்களோட முகம் இனி மலர்ச்சி அடையும். அழகும் இளமையும் கூடும். புதிய வாகனம் வாங்குவீங்க. எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். அதிக வட்டிக்கு வாங்கிய கடனைக் குறைந்த வட்டிக்கு மாற்றுவீங்க.

உத்தியோகத்தில் உங்களைப் பற்றி குறை கூறியவர்களுக்கு இனி பதிலடி கொடுப்பீங்க. தேங்கிக் கிடந்த பணிகளை விரைந்து முடிப்பீங்க. உங்களோட திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். பதவி உயர்வு, சம்பள உயர்வு எல்லாம் உண்டு. சிலருக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை அமையும்.

கலைத்துறையினருக்கு இனி பெரிய வாய்ப்புகள் கிடைக்கும். உங்களுடைய படைப்புகளை அரசு கௌரவிக்கும்.

இந்த குருப்பெயர்ச்சி முதல் வரிசையில் உங்களை உட்கார வைப்பதுடன், வசதி, வாய்ப்புகளையும் அதிகப்படுத்துவதாக அமையும்.

மிருகசீர்ஷம், 3,4 (மிதுனம்)

உங்களோட 7 மற்றும் 10ம் வீட்டின் அதிபதியான குரு பகவான் இதுவரை உங்களோட ராசிக்கு 7-ம் வீட்டில் அமர்ந்து ஓரளவு உங்களைச் சாதிக்க வைத்ததுடன், வசதி, வாய்ப்புகளையும் தந்தார். இனி இவர் உங்கள்   ராசிக்கு 8 – ம் வீட்டில் மறைந்தாலும், நீச பங்கம் பெறவிருப்பதால் அலைச்சலுடன் ஆதாயத்தையும் சேர்த்துத் தருவார்.

அவர் உங்கள் ராசிக்கு 2,4,12 ஆகிய வீடுகளைப் பார்க்கவிருக்கிறார்

பெருந்தன்மையும், சகிப்புத்தன்மையும் அதிகரிக்கும். இதமான பேச்சால் எல்லோரையும் கவர்வீங்க.

கடின உழைப்பால் படிப்படியாக முன்னேறி வாழ்வின் சிகரத்தை எட்டிப் பிடிப்பீங்க. குரு பகவான் இதுவரை உங்களோட ராசிக்கு 7 – ம் வீட்டில் அமர்ந்து ஓரளவு உங்களைச் சாதிக்க வைத்ததுடன், வசதி, வாய்ப்புகளையும் தந்தார்.

சேமிக்க முடியாதபடி அடுத்தடுத்த செலவுகள் இருந்துகொண்டேயிருக்கும். பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். சிலர் உங்களுடைய உழைப்பைப் பயன்படுத்தி முன்னேறுவாங்க. சிலர் வீடு மாற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும்.

ஓரளவு பணம் வரும். சிலர் புதிய வாகனம் வாங்குவாங்க. திருமணம் கூடி வரும். விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீங்க.

அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீங்க. திருமணம் தள்ளிப்போனவர்களுக்கு கூடி வரும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுப நிகழ்ச்சிகளெல்லாம் நடந்தேறும். மகனுக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும்.

வியாபாரத்தில் பழைய தவறுகள் நிகழ்ந்துவிடாத வண்ணம் பார்த்துக் கொள்வீங்க. தரமான பொருட்களை விற்பனை செய்வதன் மூலமாக புது வாடிக்கையாளர்கள் வருவாங்க. பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிப்பீங்க.

திருவாதிரை (மிதுனம்):

உங்களோட 7 மற்றும் 10 ம் வீட்டின் அதிபதியான குரு பகவான் இதுவரை உங்களோட ராசிக்கு 7 – ம் வீட்டில் அமர்ந்து ஓரளவு உங்களைச் சாதிக்க வைத்ததுடன், வசதி, வாய்ப்புகளையும் தந்தார். இனி இவர் உங்கள்   ராசிக்கு 8 – ம் வீட்டில் மறைந்தாலும், நீசபங்கம் பெறவிருப்பதால் அலைச்சலுடன் ஆதாயத்தையும் சேர்த்துத் தருவார்.

அவர் உங்கள் ராசிக்கு 2,4,12 ஆகிய வீடுகளைப் பார்க்கவிருக்கிறார்

பயணங்களும், தவிர்க்க முடியாத செலவுகளும் இருந்துகொண்டேயிருந்தாலும் வருமானம் குறையாது. எதையும் சமாளிக்கும் சாமர்த்தியத்தையும், மனப்பக்குவத்தையும் தருவார். உங்களிடம் இருக்கும் சில பலவீனங்களையும், பிடிவாதப் போக்கையும் கொஞ்சம் மாற்றிக் கொள்வது நல்லது.

பயணங்களும், தவிர்க்க முடியாத செலவுகளும் இருந்துகொண்டேயிருந்தாலும் வருமானம் குறையாது. எதையும் சமாளிக்கும் சாமர்த்தியத்தையும், மனப்பக்குவத்தையும் தருவார். உங்களிடம் இருக்கும் சில பலவீனங்களையும், பிடிவாதப் போக்கையும் கொஞ்சம் மாற்றிக் கொள்வது நல்லது.

குரு பகவான் 2 – ம் வீட்டைப் பார்ப்பதால் பணப்புழக்கம் கணிசமாக உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வீடு கட்ட சி.எம்.டி.ஏ., ப்ளான் அப்ரூவலாகி வரும். அரசு வகையில் அனுகூலம் உண்டு. பூர்வீக சொத்து கைக்கு வரும். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். குழந்தை பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். குரு உங்களோட சுக ஸ்தானத்தைப் பார்ப்பதால் தாயாரின் ஆரோக்கியம் சீராகும்.

குரு 12 – ம் வீட்டைப் பார்ப்பதால் புகழ்பெற்ற புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீங்க. ஒரு சொத்தை விற்று மற்றொன்று வாங்குவீங்க.

பழைய நகையை மாற்றிப்புதுப்பிப்பீங்க.

 புனர்பூசம்: 1,2,3 (மிதுனம்) :

உங்களோட 7 மற்றும் 10 ம் வீட்டின் அதிபதியான குரு பகவான் இதுவரை உங்களோட ராசிக்கு 7 – ம் வீட்டில் அமர்ந்து ஓரளவு உங்களைச் சாதிக்க வைத்ததுடன், வசதி, வாய்ப்புகளையும் தந்தார். இனி இவர் உங்கள்   ராசிக்கு 8 – ம் வீட்டில் மறைந்தாலும், நீசபங்கம் பெறவிருப்பதால் அலைச்சலுடன் ஆதாயத்தையும் சேர்த்துத் தருவார்.

அவர் உங்கள் ராசிக்கு 2,4,12 ஆகிய வீடுகளைப் பார்க்கவிருக்கிறார்

ராஜதந்திரமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீங்க. பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட கோணத்தில் தீர்வு காண்பீங்க. கணவன், மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. மறைமுக எதிரிகளால் ஆதாயமடைவீங்க. வேலைச்சுமையால் தூக்கம் குறையும்.

தாய்வழி சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உங்களோட படைப்புகள் தொலைக்காட்சி, வானொலி, செய்தித் தாள்களில் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள்.

எதிர்ப்புகள் குறையும். தாய்வழி உறவினர்களான அத்தை, அம்மான் வகையில் இருந்த பகைமை விலகும்.

மனஇறுக்கங்கள் குறையும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். குழந்தை பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும்.

மறைமுக எதிரிகளாலும்கூட ஆதாயமடைவீங்க. அரசு வகை காரியங்கள் விரைந்து முடியும். புதிய வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு வேலை கிடைக்கும்.

நீண்ட நாளாகத் தடைப்பட்டு, தள்ளிப்போன காரியங்களெல்லாம் முடிவடையும். விலை உயர்ந்த டி.வி., ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், செல்போன் வாங்குவீங்க. கணவன், மனைவிக்குள் இருந்து வந்த பனிப்போர் நீங்கும். அதிக வட்டிக்கடனை பைசல் செய்ய குறைந்த வட்டிக்குக் கடன் கிடைக்கும்.  நல்லவர்களின் நட்பு கிடைக்கும்.

– நாளை கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கான பலன்கள் வெளியாகும்…