குருபெயர்ச்சி – பொதுப்பலன்கள்

வாக்கிய பஞ்சாங்கத்தின்படி சார்வரி வருடம் ஐப்பசி மாதம் 30ம் தேதி (15 நவம்பர் 2020), இரவு மணி 9.48க்கும் திருக்கணித பஞ்சாங்கத்தின்படி கார்த்திகை மாதம் 5ம் தேதி அதாவது 20 நவம்பர் 2020 அன்று ‘குரு பெயர்ச்சி‘ நிகழவிருக்கிறது.

பொதுவாக, கிரகங்கள் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறும்போது  மனிதனின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துவது உறுதி. கிரகப்பெயர்ச்சிகளில் குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி, ராகு-கேது பெயர்ச்சிகளை மிகவும் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன.

15.11.2020 அன்று நிகழவிருக்கும் முழு சுபரான குருபகவானின் பெயர்ச்சியின் காரணமாக எந்தெந்த ராசிகளுக்கு எந்தவிதமான பலன் கிடைக்கும் என்பதைப் பார்க்கலாம்.

குரு பகவான் தற்போது தனது சொந்தவீடாகிய தனுசு ராசியில் அமர்ந்திருக்கிறார்.  அவர் அங்கிருந்து மகர ராசிக்குச்  செல்லவிருக்கிறார்.

இங்கு குறிப்பிட்டுள்ள குரு பெயர்ச்சிப் பலன்கள்  ராசியின் அடிப்படையில் கோள்-சார ரீதியாக மட்டுமே சொல்லப்பட்டிருக்கின்றன. ஒருவரின் ஜாதகத்தில் நடக்கக் கூடிய தசா புத்தியைப் பொறுத்து தான் முக்கிய மற்றும் பெரும்பாலான பலன்கள் அமையும் என்பதால் அவற்றையும் ஆராய்ந்து முடிவுக்கு வருவது நல்லது.

குருபகவான் எப்போதுமே தான் அமர்ந்திருக்கும் இடத்தை விட, பார்க்கும் பார்வைக்கு தான் அதிக நற்பலன்களை அளிப்பார்  என்பார்கள். அந்த வகையில் தற்போது மகர ராசிக்கு செல்லும் குரு அந்த ராசிக்கு வழங்குவதை விட அவரின் சுப பார்வைகள் படும் ராசிகளுக்கு சிறப்பான பலன்கள் வழங்குவார்.

குரு, தான் அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து 5ம் வீடு, 7 ஆம் வீடு, 9ம் வீடு ஆகியவற்றைப் பார்ப்பது இயல்பு.

அவ்வாறாக குரு பகவானின் புனிதப் பார்வை படவிருக்கும் இடங்கள் ரிஷபம், கடகம் மற்றும் கன்னி ஆகிய ராசிகள் ஆகும்.

மகரம் என்பது குரு பகவானின் நீச வீடு ஆகும். எனவே பொதுவாகவே சுப பலன்கள் இந்த வருடம் சற்றுக் குறைவாக இருக்கும் என்பதுதான் பரவலான கருத்து. ஆனால் இதிலும் ஒரு விதிவிலக்கு உண்டு. இன்னும் சிறிது காலத்தில்.. அதாவது, 2020, டிசம்பர் 27 ஆம் தேதியன்று சனிப்பெயர்ச்சி நிகழவுள்ளது. அப்போது நீசமான குருவுடன் ஆட்சிபெற்ற சனி அமர்ந்து நீச பங்கம் அளித்து ராஜயோகமாக்கவுள்ளார்.  ஆகவே குரு பகவானின் நீசத்தன்மை குறையும். அவர் தன்னுடைய சிறப்புப்பணியாகிய திருமணம், குழந்தைப்பேறு, சுப நிகழ்ச்சிகள், பணப்புழக்கம் ஆகியவற்றை உலக மக்களுக்கு அள்ளித்தர உள்ளார்.

குடும்பத்தின் அடிப்படை வசதிகள் பெருகும். பணவரவு உண்டு. திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். ஆனால், சனி புகவான் உடன் இருப்பதால், எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.

திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் ஆகும். குழந்தை பிறக்காதவர்களுக்குக் குழந்தை பிறக்கும். பிள்ளைகள் படிப்பில் முன்னேறுவார்கள், என்று இத்தனை காலம் குரு (தனுசு ராசியில்) ஆட்சியாக இருந்தபோது சொன்னதுபோலவே இப்போதும் சொல்ல அதிக வாய்ப்புள்ளது.

எதிலும் கவனமாகச் செயல்பட வேண்டும். திருமணத்துக்காக வெளியில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். ஆனாலும் திருமணம் நல்லபடியாக முடியும். குழந்தைகளின் படிப்பு தடைப்படுவதுபோல் பயமுறுத்தி, கடைசியில் நல்லபடியாக முடியும். நிதி நிலை சரிந்து, பின் மிக நன்கு உயரும்.

உலக அளவில் சரிந்திருந்த நிதி நிலையும் வணிக வளமும் மெல்லத் தூக்கி நிறுத்தப்படும்.

நின்றுபோயிருந்த மக்களின் உழைப்பு மீண்டும் தொடரவும், அந்த உழைப்புக்கேற்ற நற்பலன்கள் அதிகரிக்கவும் மிக நல்ல வாய்ப்பு உள்ளது.

இவ்வாண்டு நிகழ உள்ள குரு பெயர்ச்சியால் அதிக நற்பலன் பெற உள்ள ராசிகள் ரிஷபம், கடகம், கன்னி, தனுசு, மீனம் ஆகியவை.

ஏனெனில் ரிஷப ராசிக்கு ஒன்பதாம் வீட்டிற்கும், கடக ராசிக்கு ஏழாம் வீட்டுக்கும், தனுசு ராசிக்கு இரண்டாம் வீட்டுக்கும் மீனத்துக்கு லாபஸ்தானமாகிய 11க்கும் வருவது சிறப்பாகும். அதோடு குரு பகவான் ரிஷபம், கடகம், கன்னி ஆகிய ராசிகளைத் தன் அருட்பார்வை கொண்டு பார்க்கவும் இருக்கிறார்.

அதற்காக மற்ற ராசிகளுக்கு நற்பலன்கள் கிடைக்காது என்ற கவலை வேண்டாம். அவர் பார்வை படும் ராசிகள் உங்களுக்கு எந்த வீடு என்று பார்த்து அதில் மேம்பாடு கிடைக்கும் என்பதை தைரியமாக நம்பலாம்.

மேஷம், மிதுனம், சிம்மம், மகரம், கும்பம், ஆகிய ராசியைச் சேர்ந்தவர்களுக்குச் சாதகமான இடத்திற்குச் செல்லாவிட்டாலும் நீசத்தன்மை பெற்றதார் அவர்களுக்கு நன்மை செய்வார்.

எனினும்.. நம் ராசிக்குச் சாதகமாக இருந்தாலும் சரி.. சுமாராக இருந்தாலும் சரி… குரு பகவானை வழிபடுதல் .. அவருக்கான பரிகாரங்கள் செய்தல் நிறைந்த வாழ்வுக்கு வகை செய்யும்.

வியாழக்கிழமை விரதம் இருத்தல், மஞ்சள் வஸ்திரம், லட்டு ஆகியவை தானம் செய்தல், குருவாயூரப்பன், ராகவேந்திரஸ்வாமி.. ஷீர்டி சய்பாபா..  மகா பெரியவர்… ஆசார்ய ஸ்வாமிகள்.. ஜீயர்.. போன்ற எந்த குருவையும் வழிபடுதல் நன்மை தரும். குரு கீதா போன்ற சுலோகங்கள்… சாயி சத்சரிதம்.. குரு சரித்ரம் போன்றவை படித்தல் அற்புத நன்மை தரும். வியாழக்கிழமைகளில் நெய்விளக்கேற்றுதல்.. நவகிரகத்தை 21 முறை சுற்றுதல்.. மூன்று நெய்விளக்கேற்றுதல், தங்க தானம் போன்றவை நிறைவான குருப்ரீதிகள் ஆகும்.

இவற்றைப் பின்பற்றி அனைவரும் நலம் பெறுவோம்.

நட்சத்திரம் வாரியாக குருப்பெயர்ச்சி பலன்கள்

உத்திராடம்,2,3,4 (மகரம்):

உங்களோட ராசிக்கு 12 – ம் வீட்டில் அமர்ந்து உங்களுக்கு வீண் அலைச்சல், விரயச் செலவுகளைத் தந்துகொண்டிருந்த குரு பகவான் உங்கள் ராசிக்குள் நுழைந்து ஜன்ம குருவாக நீசபங்கம் பெறவிருப்பதால் அமர்வதால் பொறுப்புகளும், வேலைச்சுமையும் அதிகரிக்கும்.

அவர் உங்கள், ராசிக்கு 5,7,9 ஆகிய வீடுகளைப் பார்க்கவிருக்கிறார்.

இதுநாள் வரை உங்களை ஒதுக்கியவர்களே முக்கியத்துவம் தருவாங்க. கண்டும் காணாமல் சென்று கொண்டிருந்த சக ஊழியர்களும் மதிக்கத் தொடங்குவாங்க. எதிர்பார்த்த சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும்.

உங்களோட குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிட அனுமதிக்காதீங்க. கணவன், மனைவிக்குள் வீண்வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளின் எதிர்பார்ப்புகள் அதிகமாகிக் கொண்டேப் போகும்.

வேலைச்சுமை அதிகரித்தாலும் சுலபமாகச் சமாளித்துப்புன்னகைப்பீங்க. உங்களோட பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். எதிர்பார்த்தவை தாமதமானாலும், எதிர்பாராத சில வேலைகள் விரைந்து முடியும்.

திடீர் யோகம், பணவரவு, மகிழ்ச்சியெல்லாம் உண்டாகும். குடும்பத்தில் நிலவி வந்த கூச்சல், குழப்பங்கள் விலகும். கட்டட வேலைகளைத் தொடங்குவீங்க. வங்கிக் கடனுதவியும் கிட்டும்.

பெண்கள் யதார்த்தமாகவும், விளையாட்டாகவும் எதையோ சொல்லப் போய் அதைச் சிலர் பெரிதாக்கிக் கொண்டாலும் பிறகு உண்மை தெரிந்து தெளிவு பிறக்கும். பெற்றோரின் ஆலோசனைகளை ஏற்றி வாழ்க்கையை இப்போதே நேர்வழிப்படுத்திக்கொள்ளுங்கள்.

இந்த குரு மாற்றம் ஆரோக்கிய குறைவையும் வேலைச்சுமையையும் தந்தாலும் அனுபவ அறிவையும், தன்னை தானே உணரும் சக்தியையும் தரும்.

திருவோணம் (மகரம்):

உங்களோட ராசிக்கு 12 – ம் வீட்டில் அமர்ந்து உங்களுக்கு வீண் அலைச்சல், விரயச் செலவுகளைத் தந்துகொண்டிருந்த குரு பகவான் உங்கள் ராசிக்குள் நுழைந்து ஜன்ம குருவாக நீசபங்கம் பெறவிருப்பதால் பொறுப்புகளும், வேலைச்சுமையும் அதிகரிக்கும்.

அவர் உங்கள், ராசிக்கு 5,7,9 ஆகிய வீடுகளைப் பார்க்கவிருக்கிறார்.

கலைத்துறையினருக்குப் போட்டிகள் குறையும். தடைப்பட்டிருந்த உங்களோட படைப்புகள் வெளியாகும். மக்கள் மத்தியில் பிரபலமடைவீங்க. வருமானம் உயரும்.

ஜன்ம குருவாக இருப்பதால் அவ்வப்போது முன்கோபம் வரும். ரத்த அழுத்தம் அதிகமாக வாய்ப்பிருப்பதால், உணர்வுகளைக் கட்டுப்படுத்திக்கொண்டு அமைதியாக இருங்கள். தியானம், யோகா போன்றவை செய்வது நல்லது.

யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் முன்னால் நிற்க வேண்டாம். உங்கள் இயல்புக்கு மாறான நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாம். திடீரென்று அறிமுகமாகுபவரை நம்பி முடிவுகள் எடுக்க வேண்டாம்.

குழந்தைபாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். பூர்வீக சொத்துப் பிரச்னைகள் கொஞ்சம் கொஞ்சமாகத் தீரும். சிலர் தங்களின் பங்கை விற்று நகரந்துக்கு வெளியே இடம் வாங்குவீங்க.

உங்களோட செயலில் வேகம் கூடும். எதிரிகளை வீழ்த்துவீங்க. பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். வீடு, வாகன வசதி பெருகும். பணப்புழக்கம் அதிமாகும். எதிர்பார்ப்புகள் தடையின்றி நிறைவேறும். வழக்கில் வெற்றிபெறுவீங்க. ஊர் பொது காரியங்களை முன்னின்று நடத்துவீங்க.வியாபாரிகள்  தெரியாத தொழிலிலும் இறங்க வேண்டாம். கூட்டுத்தொழில் வேண்டாம்.

அவிட்டம்,1,2 (மகரம்):

உங்களோட ராசிக்கு 12 – ம் வீட்டில் அமர்ந்து உங்களுக்கு வீண் அலைச்சல், விரயச் செலவுகளைத் தந்துகொண்டிருந்த குரு பகவான் உங்கள் ராசிக்குள் நுழைந்து ஜன்ம குருவாக நீசபங்கம் பெறவிருப்பதால் பொறுப்புகளும், வேலைச்சுமையும் அதிகரிக்கும்.

அவர் உங்கள், ராசிக்கு 5,7,9 ஆகிய வீடுகளைப் பார்க்கவிருக்கிறார்.

மணமாகாத பெண்களுக்கு கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாகும். நேர்முகத் தேர்வில் வெற்றிபெற்று புதிய வேலையில் அமர்வாங்க. மொழி அறிவுத்திறனை வளர்த்துக்கொள்வீங்க. பெற்றோரின் அரவணைப்பு உண்டு.

தள்ளிப்போன திருமணம் கை கூடி வரும். போட்டிகளில் வெற்றிபெறுவீங்க. கணவன், மனைவிக்குள் சச்சரவு இருந்தாலும் பாசம் குறையாது.

உங்களுடைய நிர்வாகத் திறன், ஆளுமைத் திறன் அதிகரிக்கும். அரசால் அனுகூலம் உண்டு. தந்தையின் ஆரோக்கியம் சீராகும்.

கணவன், மனைவிக்குள் வீண் வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நல்லது. வெளிவட்டாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் அதிகமாகும். புது பதவிகளை யோசித்து ஏற்பது நல்லது.

வியாபாரத்தில் ஆழம் தெரியாமல் காலை விடாதீங்க. புதிதாக வரும் போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறுவீங்க. புதிய முடிவுகளோ, முதலீடுகளோ வேண்டாம்

அலுவலக ரகசியங்களை வெளியே சொல்லவேண்டாம். உங்களோட திறமையை பயன்படுத்தி வேறு சிலர் முன்னேறுவாங்க. குறைகளை நேரடி அதிகாரி சுட்டிக் காட்டினால் திருத்திக்கொள்ளுங்கள்.

ஒரு பக்கம் அலைச்சல் இருந்தாலும் முன்னேற்றம் உண்டு. ஆனால், பணவரவு குறையாது. புகழ், கௌரவம் கூடும். அரசால் ஆதாயம் உண்டு. முக்கிய பதவிகள், பொறுப்புகள் தேடி வரும். சொத்துச் சிக்கல் ஒரு முடிவுக்கு வரும்.

அவிட்டம், 3,4 (கும்பம்):

இத்தனை காலம் உங்களோட ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்து ஓரளவு வசதி வாய்ப்புகள், திடீர் யோகம் மற்றும் பணவரவு தந்துகொண்டிருந்த குரு பகவான், ராசிக்கு 12 – ம் வீடான விரய ஸ்தானத்தில் மறைவதால் வேலைச்சுமையும், அலைச்சலும் இருக்கும். சுப செலவுகள் அதிகரிக்கும்.

அவர் உங்கள், ராசிக்கு 4,6,8 ஆகிய வீடுகளைப் பார்க்கவிருக்கிறார்

மாணவ மாணவிகளுக்கு நினைவாற்றல் கூடும். படிப்பில் இருந்த அலட்சியப்போக்கு மாறும். கூடுதல் மதிப்பெண்கள் பெறுவீங்க. வகுப்பறையில் சக ஸ்டூடன்ட்ஸ் பாராட்டும்படி நடந்துகொள்வீங்க.

மனத்தில் பட்டதை பளிச்சென பேசி மற்றவர்களின் விமர்சனத்துக்கு உள்ளாவீங்க. புதிய கடன்கள் வாங்கவேண்டாம். சொத்து ஆவணங்கள், பத்திரங்கள் தொலைந்துவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

குரு உங்களோட சுகஸ்தானத்தைப் பார்ப்பதால் தாயாரின் உடல்நிலை சீராகும். பழுதான வாகனத்தை மாற்றுவீங்க. நல்ல காற்றோட்டம், குடிநீர் உள்ள வீட்டுக்கு மாறுவீங்க. சிலர் வேறு ஊருக்கு குடிபெயர்வீங்க.

குரு 6 – ம் வீட்டைப் பார்ப்பதால் பழைய கடன் அடைய வழி கிடைக்கும். குரு 8 – ம் வீட்டைப் பார்ப்பதால் ஆயுள், ஆரோக்கியம் கூடும். வழக்குகள் சாதகமாகும். பங்குச் சந்தையில் பணம் வரும்.

வருமானம் உயரும். குழந்தை பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் தொடர்பான முயற்சிகள் பலிதமாகும். குடும்பத்தினருடன் சென்று குல தெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீங்க. பூர்விகச் சொத்தில் சீர்திருத்தம் செய்வீங்க.

மின்னணு, மின்சாதனங்களைக் கவனமாகக் கையாளுங்கள். கர்ப்பிணிகள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். பிள்ளைகளால் அலைச்சல், செலவுகள் இருக்கும். அவர்களின் நிறைகளைப் பாராட்டத் தயங்காதீங்க.

சதயம் (கும்பம்):

இத்தனை காலம் உங்களோட ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்து ஓரளவு வசதி வாய்ப்புகள், திடீர் யோகம் மற்றும் பணவரவு தந்துகொண்டிருந்த குரு பகவான், ராசிக்கு 12 – ம் வீடான விரய ஸ்தானத்தில் மறைவதால் வேலைச்சுமையும், அலைச்சலும் இருக்கும். சுப செலவுகள் அதிகரிக்கும்.

அவர் உங்கள், ராசிக்கு 4,6,8 ஆகிய வீடுகளைப் பார்க்கவிருக்கிறார்

இந்த குரு மாற்றம் ஆரோக்கிய குறைவையும் வேலைச்சுமையையும் தந்தாலும் அனுபவ அறிவையும், தன்னை தானே உணரும் சக்தியையும் தரும்.

சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும்.  ஆனால் அது குடும்பத்தினருக்குத் திருப்தி கொடுக்கும். குடும்பத்தில், கணவன், மனைவிக்குள் வரும் சிறுசிறு பிரச்னைகளை பெரிதுபடுத்த வேண்டாம்.

அநாவாசியமாக யாரிடமும் வாக்குறுதி தரவேண்டாம். ஜாமீன்/ ஷ்யூரிட்டி கையெழுத்துக்கள் போட வேண்டாம்.

குரு 6 – ம் வீட்டைப் பார்ப்பதால் பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி கிடைக்கும். குரு 8 – ம் வீட்டைப் பார்ப்பதால் ஆயுள், ஆரோக்கியம் கூடும். வழக்குகள் சாதகமாகும். பங்குச் சந்தையில் பணம் வரும்.

பழைய கடன் பிரச்னை பற்றிய தேவையற்ற பயம் வேண்டாம். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் கட்டுக்குள்  இருக்கும். எந்த ஒரு காரியத்தையும் இரண்டு, மூன்று முறை போராடி முடிக்க வேண்டி வரும். எனினும் விஷயம் நல்லபடியாக முடிந்து திருப்தியும் மகிழ்ச்சியும் அளிக்கும்.

வியாபாரத்தில் சில புதிய அனுபவங்கள் கிடைக்கும். தேங்கிக் கிடந்த சரக்குகளை தள்ளுபடி விலைக்கு விற்று முடிப்பீங்க. புதிதாக அறிமுகமாகும் வாடிக்கையாளர் ஒருவரால் ஆதாயமடைவீங்க.

பூரட்டாதி,1,2,3 (கும்பம்):

இத்தனை காலம் உங்களோட ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்து ஓரளவு வசதி வாய்ப்புகள், திடீர் யோகம் மற்றும் பணவரவு தந்துகொண்டிருந்த குரு பகவான், ராசிக்கு 12 – ம் வீடான விரய ஸ்தானத்தில் மறைவதால் வேலைச்சுமையும், அலைச்சலும் இருக்கும். சுப செலவுகள் அதிகரிக்கும்

அவர் உங்கள், ராசிக்கு 4,6,8 ஆகிய வீடுகளைப் பார்க்கவிருக்கிறார்.

பிரபலமான புண்ணியஸ்தலங்களுக்குச் சென்று வருவீங்க. பழைய வீட்டை சிலர் இடித்துப் புதுப்பிப்பார்கள். அனுமதி கிடைத்துச் சிலர் புதிதாக வீடு கட்டத் தொடங்குவாங்க. உறவினர்கள், நண்பர்கள் வீட்டுத் திருமணம், கிரகப் பிரவேசம், காது குத்து போன்ற சுபநிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீங்க.

பிள்ளைகளிடம் அதிக கண்டிப்பு காட்டாதீங்க. அவர்களது உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் பற்றி திட்டமிடுவீங்க. மகளுக்கு வரன் தேடும்போது நன்றாக விசாரித்து திருமணம் முடிப்பது நல்லது.

குரு 6 – ம் வீட்டைப் பார்ப்பதால் கடன் தொல்லை ஒரு வழியாகத் தீரும். குரு 8 – ம் வீட்டைப் பார்ப்பதால் ஆரோக்கியம் மேம்படும். நோய்கள் முடிவுக்கு வரும். வழக்குகளின் தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கும். பங்குச் சந்தையில் லாபம் கூடும்.

பணிச்சுமை இருந்துகொண்டே இருக்கும். ஆனால் அதற்கான பாராட்டுக்கிடைக்கும். ஊதியமும் உயரும். வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. வெளி மனிதர்களிடம் எச்சரிகையுடன் பழகுங்கள்.

மறைமுக எதிர்ப்புகள் இருந்தாலும் உங்களுக்கென்று தனி இடம் உண்டு. இரும்பு, உணவு, ரியல் எஸ்டேட், பதிப்பகம், சிமெண்ட் வகைகளில் லாபம் கிடைக்கும்.

உத்தியோகத்தில் உங்களோட திறமைகளை வெளிப்படுத்த புதிய வாய்ப்பு கிடைக்கும். சாப்பிடவும் தூங்கவும் நேரம் இன்றி ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை இழுத்துப்போட்டு பார்க்கவேண்டி வரும். அவார்ட் கிடைக்கும்.

பூரட்டாதி, 4 (மீனம்):

உங்களோட ராசிக்கு உத்தியோகஸ்தானமான 10 – ம் வீட்டில் அமர்ந்து அடுக்கடுக்கான வேலைச்சுமையையும் மன உளைச்சலையும் தந்த குரு பகவான் இனி உங்கள் ராசிக்கு 11 – ம் வீடாகிய லாபஸ்தானத்தில் அமர்ந்து நீச பங்கம் பெறுவதால் இனி நீங்கள் வெளிச்சத்துத்துக்கு வருவீங்க. வருமானம்/ லாபம் அதிகரிக்கும்.

அவர் உங்கள், ராசிக்கு 3,5,7 ஆகிய வீடுகளைப் பார்க்கவிருக்கிறார்.

மூத்த அதிகாரிகளுடன் முரண்பாடுகள் வராமல் பார்த்துக் கொள்வீங்க.  சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் நினைத்ததை முடிப்பீங்க. பதவி உயர்வை எதிர்பார்க்கலாம்; பழைய சம்பள பாக்கி கைக்கு வரும்.

லாபம் கூடுதலாகும். எந்த வருமானமும் சற்றே நிதானமாக இருக்கும். ஆனால் அபரிமிதமாக இருக்கும்.

இனி நீங்கள் வெளிச்சத்துத்துக்கு வருவீங்க. குடும்பத்திலிருந்த பிரச்னைகளுக்கெல்லாம் இனி லாப ஸ்தான குரு பகவான் நல்ல தீர்வுகளைத் தருவார்.

கடினமான காரியங்களையும் எளிதாக முடித்து வெற்றிபெறுவீங்க. பணப்புழக்கம் அதிகரிக்கும். கைமாற்றாகவும், கடனாகவும் வாங்கியிருந்த பணத்தையெல்லாம் திருப்பித் தருவீங்க. பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு கிடைக்கும். பணப்பற்றாக்குறையால் தடைப்பட்டிருந்த வீடு கட்டும் பணியைத் தொடங்குவீங்க. வங்கிக்கடன் உதவி கிடைக்கும்.

குரு 5 – ம் வீட்டைப் பார்ப்பதால் மனத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி, தெளிவு பிறக்கும். குழந்தை பாக்கியம் உண்டு. மகளுக்கு எதிர்பார்த்த குடும்பத்திலிருந்து நல்ல வரன் அமையும். குடும்பத்தினருடன் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று நேர்த்திக் கடனை செலுத்துவீங்க.

உத்திரட்டாதி (மீனம்):

உங்களோட ராசிக்கு உத்தியோகஸ்தானமான 10 – ம் வீட்டில் அமர்ந்து அடுக்கடுக்கான வேலைச்சுமையையும் மன உளைச்சலையும் தந்த குரு பகவான் இனி உங்கள் ராசிக்கு 11 – ம் வீடாகிய லாபஸ்தானத்தில் அமர்ந்து நீச பங்கம் பெறுவதால் இனி நீங்கள் வெளிச்சத்துத்துக்கு வருவீங்க. வருமானம்/ லாபம் அதிகரிக்கும்.

அவர் உங்கள், ராசிக்கு 3,5,7 ஆகிய வீடுகளைப் பார்க்கவிருக்கிறார்.

திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கணவன், மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். மூத்த சகோதர வகையில் இருந்த மனக்கசப்பு நீங்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு நல்ல பதில் வரும். தள்ளிப்போனவர்களுக்கு திருமணம் கூடி வரும்.

தன்னிச்சையாக, தைரியமாக முடிவுகள் எடுக்கத்தொடங்குவீங்க. வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். இளைய சகோதர வகையில் அனுகூலம் உண்டு. டி.வி., ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற சாதனங்கள் வாங்குவீங்க.

திடீர் யோகம், அதிரடி முன்னேற்றம் உண்டாகும். விலை உயர்ந்த நகைகள், செல்போன், லேப் டாப், டேப் வாங்குவீங்க. தாயார் மற்றும் தாய்வழியில் இருந்துவந்த பிணக்குகள் நீங்கும். விலகியிருந்த மூத்த சகோதரர் விரும்பி வந்து பேசுவாங்க. உங்கள் ரசனைக்கேற்ற வீடு, வாகனம் அமையும்.

பயணங்கள் உண்டு. உறவினர்கள், நண்பர்களால் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். தூக்கம் குறையும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

வீடு கட்ட வங்கிகளில் பணம் வாங்கியிருந்தவர்கள் விரைந்து  செலுத்தி நினைத்ததற்கு முன்பே கடனை அடைத்துவிடுவீங்க. . முன்கூட்டியே திட்டமிட்டுக்கொண்டு வாழ்க்கை நடத்துவதால் உற்சாகம் பெருகும்.

ரேவதி (மீனம்):   

உங்களோட ராசிக்கு உத்தியோகஸ்தானமான 10 – ம் வீட்டில் அமர்ந்து அடுக்கடுக்கான வேலைச்சுமையையும் மன உளைச்சலையும் தந்த குரு பகவான் இனி உங்கள் ராசிக்கு 11 – ம் வீடாகிய லாபஸ்தானத்தில் அமர்ந்து நீச பங்கம் பெறுவதால் இனி நீங்கள் வெளிச்சத்துத்துக்கு வருவீங்க.  வருமானம்/ லாபம் அதிகரிக்கும்.

அவர் உங்கள், ராசிக்கு 3,5,7 ஆகிய வீடுகளைப் பார்க்கவிருக்கிறார்.

புதிய பதவி, பொறுப்புகள் தேடி வரும். தாமதமாகிக்கொண்டிருந்த அரசாங்க விஷயங்களெல்லாம் நல்லவிதத்தில் முடிவடையும். புதிதாக வாகனம் வாங்குவீங்க. தாயாரின் ஆரோக்கியம் சீராகும். பங்குச் சந்தையில் பணம் வரத் தொடங்கும். அநாவசியச் செலவுகளைக் கட்டுப்படுத்துவீங்க. தாய்மாமன், அத்தை வழியில் இருந்துவந்த மனஸ்தாபங்கள் விலகும். பூர்வீக சொத்துப் பங்கைக் கேட்டு வாங்குவீங்க.

குரு ராசிக்கு 7 – ம் வீட்டைப் பார்ப்பதால் சோர்வு, சலிப்பு நீங்கி உற்சாகமடைவீங்க. பணவரவு உண்டு. புதிய திட்டங்கள் நிறைவேறும். வி.ஐ.பிகளின் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்வீங்க. மனைவி வழியில் ஆதாயமடைவீங்க. விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீங்க.

தள்ளிப்போன விஷயங்கள் உடனே முடியும். பழைய நண்பர்கள் தேடி வந்து பேசுவாங்க. போட்டித் தேர்வுகளில் வெற்றிபெறுவீங்க. புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீங்க. யாருக்கும் சாட்சி கையெழுத்துப் போட வேண்டாம்.

உங்களோட திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கணவன், மனைவிக்கு நெருக்கம் அதிகரிக்கும். மனைவி வழியில் செல்வாக்கு உயரும். புதிய வேலை கிடைக்கும். அரசு வகை காரியங்கள் விரைந்து முடியும்.வியாபாரத்தில் வரவு உயரும். சந்தை நிலவரத்தைத் தெரிந்து கொண்டு குறைந்த முதலீடு செய்து லாபம் ஈட்டுவீங்க. வாடிக்கையாளர்கள் விரும்பி வருவாங்க. புதிய கிளைகள் தொடங்குவீங்க.

– முற்றும்.