குருகிராம்: 

வேலையை விட்டு நீக்கியதால் அலுவலக மொட்டை மாடியில் ஏறி  தற்கொலைசெய்வதாக மிரட்டி மீண்டும் வேலையை பெற்றுள்ளார் இளம்பெண் ஒருவர். இந்த சம்பவம் குருகிராமில் பரபரப்பை ஏற்படுத்தியது.

குருகிராம் சைபர் சிட்டி செக்டர் 18ல் உள்ள  ஒரு தனியார் ஆலோசனை நிறுவனத்தில்  பணிபுரியும் பெண்  ஒருவர் அந்த நிறுவனத்தால் பணி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், அலுவலகத்தின் மொட்டை மாடிக்கு சென்று, அதன் சுவற்றின் மீது ஏறி, விளிம்பில் நின்று கொண்டு, தனது வேலை பறிக்கப்பட்டதற்காக தற்கொலை செய்யப்போவதாக மிரட்டினார்.

இதுகுறித்து நிர்வாகம் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்து. மேலும், நிறுவன ஊழியர்கள் அந்த இளம்பெண்ணுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

காவல்துறையினரும் உடடினயாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்த பெண்ணை சமாதானப்படுத்தினர். ஆனால், அந்த பெண் அருகில் வந்தால் தற்கொலை செய்துகொள்வேன் என்று தொடர்ந்து அச்சுறுத்திவந்தார். இறுதியில், அவர் பணியாற்றிய நிறுவனம், அவரை மீண்டும் வேலையில் சேர்த்துக்கொள்வதாக உறுதி அளித்ததை தொடர்ந்து அவர் தனது தற்கொலை முடிவை கைவிட்டார்.

ஷோலே படப்பாணியில் நடைபெற்ற இந்த தற்கொலை நாடகம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.