உடற்பயிற்சி சொல்லிக் கொடுக்காமல் சில்மிஷம்.. பயிற்சியாளரை வலைவீசித் தேடும் போலீஸ்..

மாதிரி புகைப்படம்

சென்னையை அடுத்துள்ள உத்தண்டி பகுதி பள்ளியில் 13 வயது மாணவி ஒருவர் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் மாநில அளவில் ஜிம்னாஸ்டிக் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பவர். ஜிம்னாஸ்டிக் விளையாட்டில் மிகுந்த ஆர்வம் உள்ளதால் தினந்தோறும் உத்தண்டியில் உள்ள கடற்கரையில் மேற்கொள்வது வழக்கமாய் கொண்டுள்ளார்.
இவருக்கு திருவொற்றியூரைச் சேர்ந்த மகேஷ் என்பவர் உடற்பயிற்சி அளிக்கும் பயிற்சியாளராக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் மாணவிக்கு உடற்பயிற்சி கற்று கொடுக்கும் போது பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதனை அந்த மாணவி தனது பெற்றோருக்குத் தெரியப்படுத்தியுள்ளார். பெற்றோர்கள் அருகில் உள்ள காவல்நிலையத்தில் பயிற்சியாளர் மேல் புகார் கொடுத்தனர்.  புகார் அடிப்படையில் போலீஸார் பயிற்சியாளர் மகேஷ் மீது போக்சோ சட்டப்பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேஷை தேடி வருகின்றனர்.
– லெட்சுமி பிரியா