சென்னை:

மாணவர்கள் கல்லூரிக்குள் இருந்து கல்லெறிந்தால் அவர்கள்மீது குண்டு விழும் என பாஜக ஆர்ப்பாட்டத்தில்  எச்.ராஜாபேசியது சர்ச்சையாகி உள்ள நிலையில், அவர்  கூறிய கருத்து தொடர்பாக உரியவர்கள் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார்.

நெல்லை கண்ணனின் சர்ச்சைப் பேச்சு எதிராக பாஜகவினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பேசிய பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, மாணவர்கள் கல்லூரிக்குள் இருந்து கல் வீசினால அவர்கள் மீது குண்டு வீசப்படும் என்று மிரட்டினார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து எச்.ராஜாவை கைது செய்ய வேண்டும் என்று சமுக வலைதளங்களிலும்  வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்  சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரிடம் இது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்.

இதற்க பதில் அளித்தவர்,  பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் பற்றிய அவரது பேச்சின் ஆழம் பார்த்தே நெல்லைகண்ணன் கைது செய்யப்பட்டிருப்பதாக கூறினார். மேலும், எச்.ராஜா கூறிய கருத்து தொடர்பாக உரியவர்கள் புகார் அளித்தால் அது குறித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்கள ஏற்கனவே சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பாக எச்.ராஜா எஸ்.வி.சேகர் போன்றவர்களை கைது செய்யவில்லையே என்று கேள்வி எழுப்பினர், அதற்கு அவர்களின் பேச்சு பொதுவாக இருந்ததாகவும் வன்முறையை தூண்டும் வகையில் இல்லை என்றார்.

பாமக தலைவர் அன்புமணியின், பாமக இல்லை என்றால் அதிமுக வெற்றி பெற்றிருக்க முடியாது என்ற  பேச்சு குறித்த கேள்விக்கு,  அது நான்கு சுவற்றுக்குள் நடைபெற்ற நிகழ்ச்சி, அது குறித்து பேச வேண்டிய அவசியம் இல்லை என்றவர், கூட்டணிக்குள் பிளவை ஏற்படுத்த இந்த விவகாரத்தை சிலர் கையில் எடுக்க முயற்சிப்பதாக தெரிவித்தவர், பாமக அதிமுக கூட்டணி உறுதியாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.