சென்னை:
கொரோனா ஊரடங்கு காரணமாக +2 இறுதித்தாள் தேர்வை எழுத முடியாத மாணவர்களுக்கு  ஜூலை மாதம் 27- ஆம் தேதி அந்த தேர்வு தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்பட்டு உள்ளது

கொரோனா ஊரடங்கு அறிவிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் 24ந்தேதி அன்று நடைபெற்ற பிளஸ்2 பாடத்தின் கடைசி தேர்வை  எழுத முடியாத மாணவர்களுக்கு மறுத்தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி,  மாணவர்கள் படித்த பள்ளியிலேயே  தேர்வு மையங்கள் ட்டு வருகின்றன.
இந்த நிலையில், தேர்வர்களுக்கான  ஹால்டிக்கெட் வெளியாகி உள்ளது.  இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை மாணவர்கள் இன்று முதல் 17-ஆம் தேதி வரை www.dge.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாகவோ அல்லது பள்ளிகளிலோ பதிவிறக்கம் பெற்றுக்கொள்ளலாம்.
மேலும், தனித்தேர்வர்கள் ஹால் டிக்கெட்டை இந்த குறிப்பிட்ட தேதிகளில் சம்பந்தப்பட்ட தேர்வு மையங்களில் சென்று பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.