சென்னை

மிழ்த் தாய் வாழ்த்துப் பாடலை அவமதித்ததாக காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நேற்று நடந்த ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் தமிழ் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது.    அப்போது அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர்.    ஆனால் காஞ்சி சங்கர மட சங்கராசாரியார் ஆன விஜயேந்திர சரஸ்வதி அமர்ந்துக் கொண்டே இருந்தார்.  ஆனால் தேசிய கீதம் பாடும் போது எழுந்து நின்றது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது

இதற்கு பல அரசியல் தலைவர்களும் முக்கியப் புள்ளிகளும் தங்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து இந்து அமைப்பான அனுமன் சேனா தொண்டர்கள்  சென்னை ராயப்பேட்டை ஈ2 காவல் நிலையத்தில் விஜயேந்திர சரஸ்வதி மீது புகார் அளித்துள்ள்ளார்.    அவர்கள் தங்களது புகாரில் விஜயேந்திர சரஸ்வதி தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலை அவமதித்ததாக கூறி உள்ளனர்.