மும்பை: நாளை துபாய் பயணிக்கும் சிஎஸ்கே அணியுடன் ஹர்பஜன் சிங் செல்ல மாட்டார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

கொரோனா அச்சுறுத்தலால் இந்த முறை ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. செப்டம்பர் 19ம் தேதி தொடங்கி நவம்பர் 10ம் வரை இந்த தொடர் நடக்கிறது. இதற்காக 8 அணி வீரர்களும் தயாராகி வருகின்றனர்.

தொடரில் பங்கேற்க இன்று முதல் ஒவ்வொரு அணிகளும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு பயணிக்கின்றன. பஞ்சாப் அணியினர் துபாய் சென்றுவிட்டனர். இந் நிலையில், நாளை துபாய் பயணம் மேற்கொள்ளும் சிஎஸ்கே அணியுடன் ஹர்பஜன் சிங் பயணிக்கமாட்டார் என்று கூறப்படுகிறது. அவரது தாயாருக்கு ஏற்பட்டுள்ள உடல்நிலை குறைவால் அவர் பயணிக்க மாட்டார், ஒரு வாரமோ அல்லது 10 நாட்களோ கழித்து தான் செல்வார் என்று கூறப்படுகிறது.