மும்பை: கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதித் திரட்டி உதவும் பொருட்டு, பாகிஸ்தான் கிரிக்கெட் நட்சத்திரம் ஷாகித் அஃப்ரிடி மேற்கொண்டுள்ள முயற்சிக்கு ஆதரவளித்துள்ள இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்கள் ஹர்பஜன் மற்றும் யுவ்ராஜ்சிங் ஆகியோர் சமூக வலைதளங்களில் விமர்சனங்களை சந்தித்து வருகின்றனர்.

பாகிஸ்தான் கிரிக்கெட் நட்சத்திரம் ஷாகித் அஃப்ரிடி, ஒரு அறக்கட்டளை அமைத்து, கொரோனா வைரஸ் தொற்றியவர்களுக்காக நிதித் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். அவரின் முயற்சிக்கு பல கிரிக்கெட் நட்சத்திரங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.

மேலும், அவருக்கு எதிரி நாடான இந்தியாவிலிருந்தும் எதிர்பாராத ஆதரவு கிடைத்தது. இந்தியாவின் ஹர்பஜன் மற்றும் யுவ்ராஜ்சிங், டிவிட்டரில் ஆதரவும் வாழ்த்தும் தெரிவித்தனர் அஃப்ரிடிக்கு.

ஆனால், இதிலும் அரசியலைப் புகுத்தும் சிலர், ஹர்பஜன் மற்றும் யுவ்ராஜ் சிங்கிற்கு தங்களின் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். அந்த இருவர் மீதும் வைத்திருந்த மரியாதையை அவர்கள் இழந்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளனர்.