மிசெளரி: உத்திரகாண்ட் மாநிலத்தின் ஹரித்துவாரில், மஹா கும்பமேளா நிகழ்வையொட்டி, ‘ராயல் பாத்’ என்பதன் இரண்டாவது நிகழ்வு, ஏப்ரல் 12ம் தேதியான நாளை நடைபெறவுள்ளது.

கொரோனா பரவல் அச்சமூட்டிவரும் நிலையில், இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த கும்பமேளா கூடலில், மொத்தம் 3 ‘ராயல் பாத்’ நிகழ்வுகள் நடைபெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் ‘ராயல் பாத்’ நிகழ்வு, கடந்த மார்ச் மாதம் 11ம் தேதி நடைபெற்றது. அதனையடுத்து, இரண்டாவது நிகழ்வு நாளை நடைபெறவுள்ளது. அதேசமயம், மூன்றாவது நிகழ்வு, ஏப்ரல் 14ம் தேதியே நடைபெறவுள்ளது.

இதற்கான, 13 அகதாஸ்களின் ஊர்வலங்கள், நெடுஞ்சாலைகள் வழியாக நடைபெறும் என்றும், எனவே, அந்த வழிகளில் போக்குவரத்து நடைபெறாது என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.