2010 ஆம் ஆண்டு பெவர்லி ஹில்ஸ் ஹோட்டல் அறையில் நடந்த பாலியல் சீண்டலையொட்டி லாஸ் ஏஞ்சல்ஸில் வழக்கறிஞர்கள் வெள்ளிக்கிழமை அன்று ஹார்வி வைன்ஸ்டீனுக்கு எதிரான புதிய வழக்கைப் பதிவு செய்துள்ளனர்.

இந்தப் குற்றச்சாட்டை முன்வைத்த பெண், மே 11, 2010 அன்று, ஹோட்டலில் வைன்ஸ்டீன், தன் விருப்பத்தை மீறி தன்னைக் கட்டி வைத்து பாலியல் ரீதியாகச்துன்புறுத்தியதாக கூறியுள்ளார்.

இது நிரூபனமானால் இன்னமும் 4 வருடங்கள் சிறைத் தண்டனையை வைன்ஸ்டீன் பெறக்கூடும்.

ஏற்கெனவே வைன்ஸ்டீன் பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கு 23 வருட சிறைத் தண்டனையை நியூயார்க் சிறையில்அனுபவித்து வருகிறார் .

சமீபத்தில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.