சண்டிகர்: ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டாருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

கடந்த சில நாட்களாக அவர் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் இன்று கொரோனா  பரிசோதனை செய்து கொண்டார்.  சோதனை முடிவில் கட்டாருக்கு கொரோனா இருப்பது உறுதியானது.

இந்த தகவலை அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் தன்னை தொடர்புக்கு வந்த அனைவரும் தங்களை சோதித்துக் கொள்ள வேண்டும். தங்களை தனிமைப்படுத்தலுக்கு ஆட்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

முன்னதாக, ஹரியானா சட்டமன்ற சபாநாயகர் கியான் சந்த் குப்தா மற்றும் 2 பாஜக எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா உறுதியானதாக சுகாதார அமைச்சர் அனில் விஜ் தெரிவித்தார். 6 சட்டமன்ற ஊழியர்களுக்கும் கொரோனா  உறுதியானது என்பது குறிப்பிடத்தக்கது.