ண்டிகர்

ரியானாவை சேர்ந்த ஒரு ஐ ஏ எஸ் அதிகாரி 52 வயதுக்குள் 51 முறை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அரியானாவை சேர்ந்தவ ஐ ஏ எஸ் அதிகாரி அசோக் கெம்கா.  இவர் மிகவும் நேர்மையான அதிகாரி என பலராலும் புகழப்படுபவர்.    ஆனால் எந்த அரசு வந்தாலும் இவரை பணியிட மாற்றம் செய்வது சகஜமான ஒன்றாகி வருகிறது.  தற்போதைய பா ஜ க அரசால் இப்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

52 வயதாகும் அசோக் கெம்காவுக்கு இது 51 ஆவது மாற்றம் என்பது குறிப்பிடத்தக்கது.   இது குறித்து இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிந்துள்ளார்.   அதில், “எனது பணி மிகவும் திட்டமிடப்பட்டது.  இது இன்னொரு இடமாற்ற செய்தி அல்லது இன்னொரு விபத்து.  ஆனால் தற்காலிகமானது.  எனது புதிய வீரியமும் ஆற்றலும் தொடரும்” என பதிந்துள்ளார்.

பா ஜ கவைச் சேர்ந்த முதல்வர் மனோகர் கத்தார் அரசால் தற்போது விளையாட்டு அமைச்சரின் கீழ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.  இதற்கு முன்பு  பணியாற்றும் போது முதல்வர் கத்தாரின் தனிப்பட்ட ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் தொகையை முதலமைச்சரின் அலுவலகத்தில் இருந்து கொடுக்கப்பட்டதை அசோக் கெம்கா விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.