சண்டிகர்:

பாலியல் பலாத்கார வழக்கில் தேரா சச்சா சவுதா மத அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என சிபிஐ நீதிமன்றம் இன்று அறிவித்ததை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். இதனால் ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களில் வன்முறை வெடித்துள்ளது.

ஹரியானா மாநிலத்தில் சாமியாரின் ஆதரவாளர்கள் பல இடங்களில் தீவைப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பாதுகாப்பு பணியில் துணை ராணுவத்தினரும், போலீசாரும் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். கலவரக்காரர்கள் மீது ஆயுதம் பயன்படுத்த தயங்க கூடாது என மாநில அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை தொடர்ந்து வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர பாதுகாப்பு படையினர் பல இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் சாமியாரின் ஆதரவாளர்கள் பலர் காயமடைந்துள்ளனர். மீடியா வானங்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

பல வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. போலீசாருடன் சாமியார் ஆதரவாளர்கள் மோதலில் ஈடுபட்டுள்ளனர் அங்கு நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது. இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது