சண்டிகார்:

ஹரியானாவில் 80 வயது மாமியாரை தலைமுடியை பிடித்து மருமகள் அடிக்கும் காட்சி வைரலாகி வருகிறது.


ஹரியானா மாநிலம் மகேந்திரகார் மாவட்டம் நர்நாவுல் அடுத்த நிவாஜ் நகர் கிராமத்தைச் சேர்ந்தவர் காந்தா தேவி.

80 வயதான மாமியார் சந்த்பாயின் தலைமுடியைப் பிடித்து அடித்து துன்புறுத்தும் காட்சியை பள்ளி மாணவி ஒருவர் போனில் வீடியோவாக எடுத்துள்ளார்.
இந்த வீடியோ வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தகவல் அறிந்த போலீஸார் விரைந்து சென்று 80 வயது மூதாட்டியிடம் விசாரித்தனர். அப்போது, தன் மருமகள் தொடர்ந்து அடித்து துன்புறுத்துவதாக தெரிவித்தார்.

போலீஸார் வரும் தகவல் அறிந்து மருமகள் காந்தா தேவி தலைமறைவாகிவிட்டார். அவரை விரைவில் கைது செய்வோம் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.