திருவனந்தபுரம்:

கேரளாவை கடந்த ஆண்டைப்போல இந்த ஆண்டும் மிரட்டி வரும் பேய் மழை காரணமாக நிலச்சரிவில் சிக்கி 28 பேர் பலியானதாக மாநில அரசு அறிவிதது உள்ளது.  கேரளா மடிக்கரை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரு குழந்தை உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.

பல மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும், சில பகுதிகளுக்க மஞ்சள் அலர்ட்டும் விடுக்கப்பட்டு உள்ளது.

தென்மேற்குப் பருவமழை தீவிரம் அடைந்ள்ள நிலையில் கேரளாவில் கடந்த இரண்டு வாரங்களாக மழை கொட்டி வருகிறது. இதன் காரணமாக  பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க, தேசிய பேரிடர் மீட்புக் குழுவின மீட்டு வருகின்றனர்.

கனத்த மழையின் காரணமாக வயநாடு, இடுக்கி மாவட்டங்களில் கன மழையால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. புத்துமலா பகுதியில் இருந்து 60 பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் அழைத்துச் செல்லப்பட்டனர்.

கேரள மாநிலத்தின் 9 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. கோட்டயம், பத்தினம்திட்டா, ஆழப்புழா ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட், திருவனந்தபுரம், கொல்லம் மாவட்டத்திற்கு மஞ்சள்  அலர்ட் விடப்பட்டுள்ளது. மழை வெள்ளம் காரணமாக  கொச்சி சர்வதேச விமான நிலையம் கன மழை காரணமாக மூடப்பட்டுள்ளது.

தாமரசேரி தாலுக்காவில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 30 பேர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள னர். கோழிக்கோட்டில் உள்ள விளங்காட்டில் 20 எல்லையோர பாதுகாப்பு படையினர் மீட்பு பணிகளில் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில் கேரள மாநிலத்தின் வெள்ள பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் பினராயி விஜயன் அரசு அதிகாரிகள் உடன் அவசர ஆலோசனை நடத்தினார்.  மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார். மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.