முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் கதையை வைத்து படம் எடுக்கும் 3 இயக்குநர்கள் ஏ.எல்.விஜய், விஷ்ணுவர்தன் இந்தூரி, கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது ..

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ. தீபா தொடர்ந்த வழக்கில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஏ.எல்.விஜய் இயக்கும் படம் தலைவி என்னும் பெயரிலும் , பிரியதர்ஷினி இயக்கத்தில் The Iron lady என்ற பெயரிலும் Queen என்ற வெப் சீரிஸை இயக்குநர் கெளதம்மேனனும் இயக்குகிறார்.

இந்நிலையில், தன்னுடைய அனுமதியில்லாமல் தலைவி படத்தையும், இணையதள தொடரையும் தயாரிக்க தடை விதிக்க கோரி ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கல்யாணசுந்தரம், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து படங்கள் எடுக்க தடை விதிக்க உரிமையியல் வழக்கு தொடர ஜெ.தீபாவிற்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.