சென்னை.

செவிலியர்கள் போராட்டத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

செவிலியர்களின் போராட்டம் மூன்றாவது நாட்களாக தொடர்ந்து வரும் வேளையில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த போராட்டத்துக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.  மேலும்  போராடும் செவிலியர்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

செவிலியர்கள் போராட்டத்தால் பல நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நோயாளிகளின் பாதிப்புக்கு செவிலியர்கள் பொறுப்பு எற்பார்களா எனவும் கேட்டுள்ளது.  பணியில் இருந்தவாறு கோரிக்கைகள் குறித்து பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் எனவும் நாளை அனைத்துச் செவிலியரும் பணிக்கு திரும்ப வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.