தானும் அவரது மனைவி ஜீவிதாவும் கொரோனா வைரஸ் பாதிப்புள்ளாகியதாகவும் தற்போது ஹைதராபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் நடிகர் ராஜசேகர் சமீபத்தில் அறிவித்தார்.
அவர்கள் இருவரும் “விரைவில் வீடு திரும்புவர்” என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். அவரது மகள்கள் சிவானி மற்றும் சிவாத்மிகா ஆகியோரும் கோவிட் -19 க்கு சாதகமாக சோதிக்கப்பட்டனர், ஆனால் மீண்டு வந்தனர்.
இருப்பினும், ராஜசேகரின் உடல்நிலை பற்றி மருத்துவமனையில் இருந்து அறிக்கை வெளியாகியது.
அதில் , ”கொரோனா வைரஸ் தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜசேகர், தற்போது செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவரின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும், மருத்துவர்களின் கண்கானிப்பில் அவர் வைக்கப்பட்டிருப்பதாகவும்” அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


இந்நிலையில் அவரின் மகள் சிவாத்மிகா உங்கள் அன்பிற்கும் விருப்பங்களுக்கும் நான் அனைவருக்கும் நன்றி சொல்ல முடியவில்லை .அப்பா ஆபத்தான நிலையில் இல்லை அவர் நிலையாக உள்ளார். மேலும் குணமடைந்து வருகிறார்.எங்களுக்கு உங்கள் பிரார்த்தனைகள் தேவை. மீண்டும் ஒரு முறை நன்றி சொல்லி கொள்கிறேன் பீதியடைய வேண்டாம். தயவுசெய்து போலி செய்திகளை பரப்ப வேண்டாம் என பதிவிட்டுள்ளார் .