சென்னை:

நெஞ்சுவலி காரணமாக திமுக பொருளாளர் துரைமுருகன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அப்போலோவில் அனுமதிக்கப்பட்டு ஒரு வாரத்திற்கும் மேலாக சிகிச்சை பெற்று வரும் நிலையில், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக துரைமுருகனும் அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ளது திமுக தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கிண்டல் மற்றும் நக்கலாக பேசி அனைவரையும் கலக்கி வருபவர் துரைமுருகன்.  செய்தியாளர் கள் பேட்டி என்றாலும் சரி, சட்டமன்றமானாலும் சரி அவரது பேச்சு தனி ரகம். அதற்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு

இந்த நிலையில், தமிழக சட்டசபையில் நேற்று கருணாநிதி மறைவு இரங்கல் தீர்மானத்தில் பேசிய துரைமுருகன், கண்ணீர் விட்டு கதறி அழுதார். அதைத்தொடர்ந்து சோகமாக இருந்து வந்த அவருக்கு ,இன்று காலை திடீரென  உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

நேற்று சட்டமன்றத்தில் கண்ணீருடன் உரையாற்றிய துரைமுருகன்

இதையடுத்து உடனடியாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நேற்றைய சட்ட மன்றத்தின்போது, தனக்கு ஏற்கனவே நெஞ்சுவலி காரணமாக இருதய அறுவை சிகிச்சை நடைபெற்றதாகவும், தனக்கு 2வது முறையாக  உயிர் கொடுத்தவர் கலைஞர்தான் என்று அவரை பெருமைப்படுத்தி பேசியது குறிப்பிடத்தக்கது.