சேலம்

சேலம் மாவட்ட கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கொரோனா அச்சத்தால் வெற்றி ஊர்வலம் நடத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன் ஆஸ்திரேலியாவுக்கு சென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார்.  தற்போது வெற்றி வாகை சூடி அவர் ஆஸ்திரேலியாவில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பி உள்ளார்.  அவருக்கு உலகெங்கும் உள்ள ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர்.

அவரது சொந்த ஊர் மக்கள் அவரது வெற்றியைக் கொண்டாட அவரை ஊர்வலமாக அழைத்து வந்து மாபெரும் வரவேற்பு  அளிக்கத் திட்டமிட்டனர்.  வரவேற்பு நிகழ்வுக்காகப் பெரிய மேடை அமைக்கப்பட்டிருந்தது.  ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சுகாதாரத்துறை அதிகாரிகளின் உத்தரவுப்படி அந்த மேடைகள் அகற்றப்பட்டுள்ளன.

மேலும் அவரை ஊர்வலமாக அழைத்து வரக்கூடாது எனவும் சுகாதாரத்துறை தடை விதித்துள்ளது.  நடராஜன் கொரோனா பரிசோதனை செய்துக் கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.  எனவே கொரோனா விதிமுறைகளின்படி நடராஜன் வெளிநாட்டில் இருந்து வருவதால் தன்னை 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.