சென்னை: சென்னையில் இன்று காலை நிகழ்ந்த கடும் பனி மூட்டம் காரணமாக, சென்னை விமான சேவைகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, 16 விமானங்கள் புறப்படும் மற்றும் வருவது தாமதமாகி இருப்பதாக சென்னை விமான நிலையம் அறிவித்து உள்ளது.
சென்னையில் இன்று அதிகாலை நிலவிய கடும் பனிமூட்டம் காரணமாக, சாலைகளில் வாகனப் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது. வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டபடியே சென்றன.
அதுபோல, பனி மூட்டம் காரணமாக சென்னையில் இருந்து  புறப்படும் 12 விமானங்கள் உள்பட 16 விமான சேவைகள் தாமதமானது.  அதுபோல, மற்ற மாநிலங்களில் இருந்து சென்னை வந்த விமானங்களும் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டது. அதனால், அந்த விமானங்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது.
பின்னர், சூரிய உதயமானதும்,  பனி மூட்டம் சிறிது சிறிதாக விலகியது. அதைத்தொடர்ந்துஐ, நிலைமை சீரடைந்ததால், மும்பை, பெங்களூருவில் இருந்து சென்னை வந்த விமானங்கள் சென்னை திரும்பியது.