சென்னை,

ன மழை காரணமாக ஏற்படும் பாதிப்புகள் குறித்து 1070 எண்ணை உடனே தொடர்பு கொள்ளலாம் என தமிழக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு முதல் சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளதால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மழை மேலும் இரண்டு நாட்கள் தொடரும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில்,  கனமழை பெய்வதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ள நிலையில், அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், கனமழை மற்றும் பாதிப்புகள் குறித்த தகவல்களைப் பொதுமக்கள் உடனடியாக தெரிவிக்க, 1070 என்ற கட்டுப்பாட்டு அறை எண்ணுக்குத் தகவல் அளிக்கலாம் என்று கூறியுள்ளார்.

மேலும், பாதிப்புகள் ஏற்படுவதற்கான இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அவர் கூறினார்.