சென்னை:

தொடர் பலத்த மழை காரணமாக சென்னை புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. தாம்பரம்- செங்கல்பட்டு இடையே புறநகர் ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன. மேலும் சென்ட்ரல், எழும்பூரில் இருந்து புறப்படும் மற்றும் வந்தடையும் ரெயில்களின் நேரங்கள் மாற்றப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நேற்று பெய்த கனமழை காரணமாக, மாலையில் மின்சார ரயில் சேவை சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.
இந்தநிலையில், சென்னை முழுவதும் இன்றும் மேகமூட்டமாக காணப்படுகிறது. இருப்பினும், இன்று மின்சார ரயில் சேவையில் பாதிப்பு எதுவும் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ரயில்வே துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கினால் அதை அகற்ற மோட்டார் பம்புகள் பயன்படுத்தப்படும் எனவும், ரயில்கள் வழக்கமான வேகத்தைக் காட்டிலும் குறைவான வேகத்தில் இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்ட்ரல், எழும்பூரில் 57 ரயில்கள் புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், அதுபோல. எழும்பூருக்கு வந்தடையும் 25 ரயில்களின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளன என்றும் ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.