கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை கொட்டித்தீர்த்து வருவதால், மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடனும், இடி மின்னலுடனும் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. காலை முதல் கடும் வெயில் வாட்டி வதைத்த நிலையில், மாலை 3 மணிக்கு பின்னர் திடீரென மேகமூட்டம் காணப்பட்டது. இதனால் மழை வரும் வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்ட நிலையில், தற்போது கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், வெப்பம் தனிந்துள்ளதோடு, நிலத்தடி நீர்மட்டம் உயரும் வாய்ப்பு இருப்பதாகவும் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.