தமிழகம் :கடலோர மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை
சென்னை
தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நேற்று முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. நகரில் பல இடங்களில் சாலைகளில் நீர் தேங்கி உள்ளது. அத்துடன் இன்று முதல் வடகிழக்கு பருவ மழை தொடங்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வங்கக் கடலில் மேலடுக்கு சுழற்சியும் நீடித்து வருகிறது.
இதை ஒட்டி சென்னை வானிலை மையம், “தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் கடலோர மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அத்துடன் தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் இன்று மழை பெய்யும்.
இடைவெளி விட்டு மிதமழையோ அல்லது தொடர் கனமழையோ சென்னையில் பெய்ய வாய்ப்புள்ளது.
அத்துடன் தமிழகத்தின் பல இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஒரு சில இடங்களில் 20 செமீ வரை கனமழை பெய்யக்கூடும்“ என தெரிவித்துள்ளது.