மதுரை:

மிழகத்தில் வெயிலின் தாக்கம் 100 டிகிரியை தாண்டி கொதித்துக்கொண்டிருக்கும்  நிலையில், வெப்பச் சலனம் காரணமாக பல இடங்களில் மழையும் பெய்து வருகிறது. மதுரை அருகே நேற்று இரவு பெய்த கனமழையின்போது மின்னல் தாக்கி பெண் ஒருவர் பலியானார்.

நேற்று தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது.

இந்நிலையில் மதுரை மாவட்டத்தில்  இடி-மின்னலுடன் கன மழை கொட்டியது. அப்போது மின்னல் தாக்கி பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

நேற்று மாலை மதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சுமார் 4 மணி நேரம் இடி மின்னலுடன் பெயர் தொடர்மழையின்போது வயலில் வேலை பார்த்துக் கொண்டி ருந்த  மேலூர் அருகே எட்டிமங்கலத்தைச் சேர்ந்த அய்யாவு என்பவரின் மனைவி நாச்சம்மாள்  என்ற பெண்மணி மின்னல் தாக்கி பரிதாபமாக இறந்தார்.

இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.