தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், “தென்மேற்கு வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நீடிப்பதால் தமிழம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு மழை தொடரும்., பெரும்பாலான இடங்களில் மிதமான மழைக்கும்,காவிரி டெல்டா மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது.

அடுத்த மூன்று நாட்களுக்கு கேரளா, கர்நாடகா, மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். சென்னையில் அவ்வபோது சில இடங்களில் மழை பெய்யக்கூடும்” என்று தெரிவித்தார்.