சென்னை,

டில்லியை போன்று சென்னையிலும் இன்று கடும் பனிமூட்டம் நிலவியதால், விமானங்கள்  தரையிறங்க முடியாமல் தவித்தன. இதன் காரணமாக  சில விமானங்கள் பெங்களூரு திருப்பி விடப்பட்டன.

சென்னையில் இருந்து வெளி ஊர்களுக்கு மற்றும் வெளிநாடுகளுக்கு புறப்படும் விமானங்கள் தாமதமாக புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

லண்டனிலிருந்து சென்னை வரும் விமானம் ரத்து செய்யப்படடதாகவும்,  சென்னையில் இருந்து புறப்பட உள்ள   12 விமானங்கள்  தாமதமாக புறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலையில் சென்னை மற்றும் புற நகர்ப் பகுதிகளில் இன்று காலை கடும் பனி மூட்டம் நிலவியது. இதன் காரணமாக  நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களும் பாதிப்புக்கு உள்ளாயின.  பெரும்பாலான வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இதன் காரணமாக கடும் போக்கு வரத்து நெரிசலும் ஏற்பட்டது.

சென்னை விமான நிலையப் பகுதியிலும் கடும் பனி மூட்டம் நிலவியதால், சிக்னல் விளக்குகள் சரியாகத் தெரியாததால், விமானங்கள் தரை இறங்குவதில் பாதிப்பு ஏற்பட்டது.

சில விமானங்கள் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டன.  லண்டனிலிருந்து சென்னை வரும் விமானம் ரத்து செய்யப்பட்டது.