மும்பை:

மும்பை தீ விபத்துக்கு மக்கள் தொகை பெருக்கம் தான் காரணம் என்று கூறி பாஜக எம்பி ஹேமமாலினி புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

மும்பை கமலா மில்ஸ் வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து பிரபல நடிகையும், பாஜக எம்.பி.யுமான ஹேமமாலினி கூறுகையில், ‘‘ மும்பையில் மக்கள் தொகை அதிகரித்துள்ளது. மாநகரம் வரிவடைந்து கொண்டே செல்கிறது. மக்கள் தொகைக்கு ஒரு கட்டுப்பாடு விதிக்க வேண்டும். ஒவ்வொரு நகரிலும் வசிக்க வேண்டிய மக்கள் தொகையை வரையறை செய்ய வேண்டும். அதற்கு மேல் உள்ளவர்களை வேறு நகரங்களுக்கு அனுப்ப வேண்டும்’’ என்றார்.

இந்த தீ விபத்துக்கு அந்த வளாகத்தில் உள்ள பப் தான் காரணம் என்று போலீசாரும், மாநகராட்சி அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர். பப்பில் தீ தடுப்பு விதிமுறைகள் எதுவும் கடைபிடிக்கவில்லை என்று குற்றம்சாட்டுகின்றனர். அதோடு அவசர வழியை அடைத்து வைத்துள்ளனர். சம்பவ இடத்தில் சிக்கிய வாடிக்கையாளர்களை மீட்க உதவாமல் பப் மேலாளர், ஊழியர்கள் தப்பி ஓடிவிட்டனர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.