தமிழகத்தில் நேற்று புதிதாக 25 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,267 ஆக இதுவரை 15 பேர் உயிரிழந்து உள்ளனர். அதுபோல, இதுவரை 180 பேர் கொரோனா தொற்றில் இருந்து விடுதலை அடைந்துள்ளனர்.

தமிழகத்திலேயே அதிகபட்சமாக தலைநகர்  சென்னையில் 217 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக சென்னை மாநகராட்சித் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில், ஒவ்வொரு மண்டலத்திலும் எத்தனை பேருக்கு கொரோனா தொற்று உள்ளது என்பதையும் தெரிவித்து உள்ளது.