பொருத்தமான ஹீரோயின் வேணும்னு தேடிக்கிட்டிருக்கோம்” என்கிற டயலாக்கை, இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்கள் சொல்வது சகஜம்தான். ஆனால் படத்தில் நடித்துக்கொண்டிருந்த ஹீரோயினை காணோம் என்று நொந்து போய்  சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் “எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா” படக்குழுவினர்.
TN. 75 கே.கே கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பாக ஜோசப் லாரன்ஸ் என்பவர் தயாரிக்க  கேவின் ஜோசப் இயக்கி வரும் இந்த படத்தின் நாயகன் ” கல்லூரி” அகில்.
நாயகியாக இஷாராவை புக் செய்தார்கள்.  சதுரங்க வேட்டை படத்தில் கதாநாயகியாக நடித்த இவர், அடுத்தாதக “பப்பாளி” என்ற படத்திலும் நடித்தார்.   அவர்தான் பாதி படப்பிடிப்பில் எஸ்கேப் ஆகிவிட்டாராம்.

இஷாரா
இஷாரா

இது குறித்து   படத்தின்  தயாரிப்பாளர் மற்றும் மற்றும் இயக்குனர் சொல்வதைக் கேளுங்கள்:
“இஷாராவை 28.02.2016 அன்று 4 லட்சம் ரூபாய் சம்பளம் பேசி 75 ஆயிரம் அட்வான்ஸ் கொடுத்து ஒப்பந்தம் செய்தோம்.   நங்கள் கேட்டது 20 நாட்கள் தான். ஆனால் இஷாரா இரண்டே நாட்கள் தான் தேதி கொடுத்தார்.  அவர் பங்குபெற்ற இரண்டு நாட்களுமே அவர் சிறப்பான ஒத்துழைப்பு கொடுத்தார் என்பது மறுக்க முடியாத உண்மை.
அதற்கு பிறகு அவரிடம் தொடர்புகொண்டு தேதி கேட்டதற்கு, “துபாயில் இருக்கிறேன், கேரளாவில் இருக்கிறேன். வேறு படப்பிடிப்பில் இருக்கிறேன்” என்று வாட்ஸ்ஆப்பில் தான் பதில் கூறினார்.
தொடர்ந்து கேட்டபோது, “என்னிடம் டைரக்டர் சொன்ன கதைவேறு, எடுக்கும் கதை வேறு” என்று நழுவலாக பதில் சொன்னார். சில சமயங்களில் யாரோ ஒரு ஆண் குரல்தான்  பதில் சொல்லும்.  இதோ கூப்பிட சொல்கிறோம் என்று சொல்லி அதோடு போன் ஸ்விட்ச் ஆப் ஆகிவிடும்.
நங்கள், “கதையில் ஏதாவது திருத்தும் இருந்தால் சொல்லுங்கள் மாற்றிக் கொள்கிறோம்” என்றோம். “இதோ வருகிறேன்,  அதோ வருகிறேன்” என்பார்.. தேதி கொடுப்பார் ஆனால் சொன்ன தேதியில் படப்பிடிப்பிற்கு வரவே  மாட்டார். பல முறை முயற்சி செய்தும் தோற்றுவிட்டோம். அவரால் எங்களுக்கு பல லட்சம் ரூபாய் வரை நஷ்டம்.
வேறு வழி இல்லாமல் கேரளாவில் உள்ள நடிகர் சங்கம் வரை சென்று முறையிட்டோம். அவர்களுக்கும் இஷாரா தரப்பில் சரியான பதில் தரப்படவில்லை. தயாரிப்பாளர் கில்டில் திரு.ஜாக்குவார் தங்கம் மூலம் இஷாரவிடம் பேச சொன்னோம். அவர்களுக்கும் சரியான தகவல் இல்லை.
இஷாரா
இஷாரா

இஷாரவுக்கு போன் செய்தால் BLOCK லிஸ்டில் எங்கள் எல்லோரது டெலிபோன் எண்களையும் மாற்றி விட்டார்.  “உங்களது அணுகுமுறை சரியில்லை நங்கள் பத்திரிகையாளர்களிடம் முறையிடுவோம், கோர்டுக்கும் போவோம்” என்று மெசேஜ் அனுப்பினோம் அதற்கு அவரிடம் இருந்து வந்த பதில் “ போங்க “  என்பதுதான்.
இனி வேறு வழியில்லை..  இஷாரா மீது காவல்துறையில் புகார் செய்ய இருக்கிறோம்” என்று குமுறுகிறார்கள், தயாரிப்பாளரும்,  இயக்குநரும்.
என்னம்மா…. இப்படி பண்றீங்களேம்மா!