மதுரை:

தேமுதிக பொருளாளர் பிரேமலதா உள்பட 4 பேர் மீதான தேர்தல் வழக்கை உயர்நீதி மன்றத்தின் மதுரை கிளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற  சட்டமன்ற பொதுத் தேர்தல் பிரசாரத்தின்போது, தேர்தல் விதிகளை மீறி  பல கார்களில் பிரசாரம் செய்ய சென்றதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா உள்பட 4 பேர் மீது  தாடிக்கொம்பு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

இதை எதிர்த்து தேமுதிக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தாங்கள் எவ்விதமான விதி மீறலிலும் ஈடுபடவில்லை என்றும் அரசியல் காரணங்களுக்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த  நீதிபதி இளந்திரையன், வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.