‘மகாநதி’ படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ஷோபனா. கர்நாடக இசைக் கலைஞரான இவர், கடந்த 1995 ஆம் ஆண்டு ‘சிம்பொனி’ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து ‘கந்த சஷ்டி கவசம்’ ‘ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்’ ஆகிய இரண்டு ஆல்பங்களைப் பாடியுள்ளார்.

இது யூ டியூப்பில் ‘சிம்பொனி’ மற்றும் ‘பக்தி எஃப்.எம்’ பெயரில்வெளியிடப்பட்டு தற்போது 47 கோடிக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

தன் பாடல்களை தன்னுடைய அனுமதியில்லாமல் ப் சிம்பொனி நிறுவனம் பயன்படுத்தி வருமானம் பெறுவதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஷோபனா வழக்குத் தொடர்ந்திருந்தார்.

சிம்பொனி நிறுவனம் 13 வயதில் மைனராக இருந்தபோது ஷோபனாவிடம் போட்ட ஒப்பந்தம் சட்ட ரீதியாகச் செல்லாது எனவும் ஷோபனா அனுமதி இல்லாமல் அவரின் புகைப்படங்களை பாடல்களுக்கு பயன்படுத்தியது சட்டவிரோதமானது எனவும் வாதிட்டார் அவர் வக்கீல் .

இந்த வாதங்களை ஏற்ற நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், ‘மகாநதி’ ஷோபனா பாடிய இரு ஆல்பங்களை வெளியிட சிம்பொனி நிறுவனத்துக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.