சென்னை: அரியர் தேர்வு மாணவர்களை தேர்ச்சி செய்வதற்கு ஏஐசிடிஇ எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று உயர்கல்வி அமைச்சர் அன்பழகன் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக இறுதியாண்டு செமஸ்ட்ர் தேர்வுக்காக காத்திருக்கும் மாணவர்களை தவிர்த்து அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது. அரியர்ஸ் இருந்தாலும், அனைத்து பொறியியல் மாணவர்களும் தேர்ச்சி செய்யப்படுவார்கள் என்று தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

ஆனால் தமிழக அரசின் இந்த அறிவிப்பை ஏற்க இயலாது என்று ஏஐசிடிஇ தெரிவித்திருந்ததாக சென்னை அண்ணா பல்கலைக்கழகம் கூறியிருந்தது. இந் நிலையில், அரியர் மாணவர்களை ஆல் பாஸ் செய்ய ஏஐசிடிஇ எதிர்ப்பு எதுவும் தெரிவிக்கவில்லை என உயர் கல்வி அமைச்சர் அன்பழகன் கூறியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அரியர் தேர்வு மாணவர்களை ஆல்பாஸ் செய்ய ஏஐசிடிஇ எதிர்ப்பு என்ற தகவல் தவறு.இது தொடர்பாக அகில இந்திய தொழில்நுட்ப கழகத்தில் இருந்து எந்த இ மெயிலும் வரவில்லை. அரியர் மாணவர்கள் தேர்ச்சி என்ற அரசின் அறிவிப்பு செல்லும். அரசின் முடிவில் எந்த மாற்றமும் கிடையாது என்றும் கூறினார்.