சென்னை: தமிழக மருத்துவக்கல்லூரிகளில், அகில இந்திய ஒதுக்கீட்டின்படி  படிக்கும் மருத்துவ மாணவர்கள் 2ஆண்டுகள் தமிழகத்தில் பணியாற்ற வேண்டும் என  தமிழகஅரசின் உத்தரவை சென்னை உயர்நீதி மன்றம் உறுதி செய்துள்ளது.  மருத்துவ மேற்படிப்பு மாணவர்கள் ‘2 ஆண்டுகள்  தமிழகத்தில் உள்ள மருத்துவமனையில் பணியாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளது.

தமிழகத்தில் அரசு மற்றும் உதவி உதவி பெரும் கல்லூரிகளில் மருத்துவ மேற்படிப்பு படிக்கும் மாணவர்கள், படிப்பை முடித்தவுடன் கட்டாயம் 2 ஆண்டுகள், தமிழகத்தில் உள்ள  அரசு மருத்துவமனையில் பணி புரிய வேண்டும் என்பது தமிழக அரசின் உத்தரவு.

இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு   276 மாணவ, மாணவிகள் கடந்த ஆண்டு (2019) சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அவர்களது மனுவில், அகில இந்திய மருத்துவ படிப்பு கொள்கையில் இது போன்ற எந்த உத்தரவும் இல்லை என்றும் இது சட்டவிரோதமான உத்தரவு என்றும், தமிழகஅரசின் உத்தரவு தங்களை கட்டுப்படுத்தாது என்றும் தெரிவித்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி, தமிழகஅரசின் உத்தரவை ரத்து செய்து, மருத்துவ மாணவர்கள் தமிழகத்தில் 2 ஆண்டுகள் பணிபுரிய வேண்டிய அவசியம் இல்லை என்று தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழகஅரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அந்த மனுமீதான விசாரணை,  சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி சாஹி தலைமையிலான அமர்வில்  இன்று விசாரிக்கப்பட்டது.

விசாரணையைத் தொடர்ந்து, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்த நீதிபதிகள், அகில இந்திய ஒதுக்கீட்டில், தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில், மருத்துவ மேற்படிப்பு படிக்கும் மாணவர்கள் 2 ஆண்டுகள் பணிபுரிந்தால் தான் அவர்களது சான்றிதழ்கள் திரும்ப வழங்கப்படும் என்ற அரசின் உத்தரவு செல்லும் என உத்தரவிட்டனர்.

மேலும், அரசால்,  மாணவர்க்ளுக்கு 2 ஆண்டுகளுக்குள் வேலை வழங்க முடியவில்லை என்றால் சான்றிதழ்களை திரும்பக் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு தீர்ப்பு வழங்கி உள்ளது.