சென்னை:

மிழகத்தில் தேர்தல் அதிகாரிகள், உயர்அதிகாரிகள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர், இதை தடுக்க வேண்டும்  என்று  இந்திய தேர்தல்ஆணையத்துக்கு திமுக கடிதம் கடிதம் எழுதி உள்ளது.

இதுகுறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமை தேர்தல் ஆணையருக்கு கடிதம் எழுதி உள்ளார்.

அதில், எதிர்க்கட்சிகள் மீது வருமான வரித்துறை மற்றும் அரசு இயந்திரங்களை கொண்டு சோதனை நடத்துவது, அச்சுறுத்துவது, இதையேல்லாம்  பார்க்கும் போது, தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறதோ என்று தோன்றுகிறது. அதுமட்டுமல்லாமல் தேர்தல் நியாயமாகவும் நேர்மையாகவும் நடக்காது என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.

தமிழக காவல்துறை தலைவர் டி.கே.ராஜேந்திரன் மற்றும் உளவுத்துறை ஐஜி சத்தியமூர்த்தி ஆகியோரின் வழிநடத்துதலின்படி போலீஸ் வாகனங்களில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக ஆளும் கட்சியினுடைய பணம் கடத்தப்படுகிறது. அது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. எனவே இந்தப் போலீஸ் அதிகாரிகள் தாமதமின்றி உடனடியாக மாற்றம் செய்யப்பட வேண்டும் .

தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் இருப்பதால் ராணுவ வீரர்களைப் பற்றி தேர்தல் பிரசாரத்தில் பேசக்கூடாது என தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. ஆனால் இதை மீறி தமிழக முதல்வர் விங் கமாண்டர் அபிநந்தன் பற்றி தன்னுடைய பிரசாரத்தில் மீண்டும் மீண்டும் குறிப்பிட்டு வருகிறார் .

இதுகுறித்து தமிக தேர்தல் ஆணையம் எந்தவித நடவடிக்கையும் எடுக்க மறுத்து வருகிறது. எனவே, தலைமை தேர்தல் ஆணையர் தலையிட்டு, இதை தடுக்க வேண்டும். உயர் பதவில் இருக்கக்கூடிய ஐஏஎஸ் மற்றும் போலீஸ் அதிகாரிகள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதை தேர்தல் ஆணையம் தடுக்காவிட்டால் ஜனநாயகத்தின் தோல்விக்கு வழிவகுக்கும். அதிகாரிகள் ஆளுங்கட்சிக்கு துணை போவது மிகுந்த வேதனை அளிக்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.