டில்லி:

லக அளவில் பேஸ்புக்கை அதிகளவில் பயன்படுத்துபவர்கள் இந்தியர்களே என்பது தெரியவந்துள்ளது.

சமூக வலைதளங்களை பயன்படுத்தும் போக்கு இந்தியாவில் அதிவேகமாக அதிகரித்து வருகிறது. ஸ்மார்ட் போன்கள் மூலமாக பேஸ்புக், வாட்ஸ் அப், ட்விட்டர் போன்ற சமூகவலைதளங்கலை பயன்படுத்துபவர்கள் பெருகி வருகிறார்கள்.

உலக அளவில் 24.1 கோடி பயனாளர்களுடன் இந்தியா முதல் இடத்தை வகிக்கிறது. அடுத்த இடத்தில் 24 கோடி பயனாளர்களுடன் அமெரிக்கா உள்ளது.

கடந்த ஆறு மாதங்களில் மட்டும் இந்தியாவில் புதிதாக பேஸ்புக் பயன்பாட்டுத்துவோர் எண்ணிக்கை 5 கோடி ஆகும். இதே காலகட்டத்தில், அமெரிக்காவில் 2.6 கோடி பேர் மட்டுமே புதிதாக பேஸ்புக்கில் இணைந்துள்ளனர்.

அதே நேரம் இந்திய மக்கள் தொகையில் 20 சதவீதத்தினர் மட்டுமே பேஸ்புக் பயன்படுத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.