ஷிம்லா: இமாச்சலப் பிரதேசத்தின் பாரதீய ஜனதா முதல்வர் ஜெய் ராம் தாகூர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதல்வர் அலுவலகத்தில் பணியாற்றிய ஒரு துணைச் செயலாளருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து, முதல்வர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
“கொரோனா விதிமுறையின்படி, நான் என்னையே தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திக் கொண்டுள்ளேன்” என்றுள்ளார் முதல்வர். அவரின் அதிகாரப்பூர்வ இல்லமான ஒக்கோவர் இல்லத்திலேயே அவர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
முதல்வரிடமிருந்து, பரிசோதனைக்காக விரைவில் சாம்பிள்கள் பெறப்படும் என்று கூறப்பட்டுள்ளது.