ஜோத்பூர்

ரு இந்துப் பெண் தனது இஸ்லாமிய காதலரை இந்துவாக மாற வற்புறுத்தி வருகிறார்.

ஜோத்பூர் நகரில் வசித்து வரும் 20 வயது பட்டாதாரி இந்துப் பெண் பூஜா ஜோஷி.  இவர் ஆக்ஸ் ஓட்டுனராக உள்ள மோசின் கான் என்னும் இஸ்லாமிய இளைஞரை காதலித்து வந்தார்.  கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று இருவரும் ஊரை விட்டு ஓடி விட்டனர்.  கலக்கம் அடைந்த பெண்ணின் பெற்றோர்கள் போலீசில் புகார் அளித்தனர்.  அவர்கள் இருவரையும் பிகானேர் பகுதியில் கண்டுபிடித்து ஜோத்பூர் காவல் நிலையத்துக்கு போலீசார் அழைத்து வந்தனர்.

காவல் நிலைய வாயிலில் இந்து அமைப்பினர் பலர் கூடி விட்டனர்.  ”லவ் ஜிகாத்தை தடை செய்” எனக் கோஷம் எழுப்பிய அவர்கள் மோசினை தாக்க முயன்றுள்ளனர்.  போலீஸ் அசிஸ்டெண்ட் கமிஷனர் பூஜா யாதவ் அவர்களை காப்பாற்றி நீதிபதி முன் ஆஜர் படுத்தி உள்ளார்.  நீதிபதியிடம் அந்தப் பெண் மோசின் இந்துவாக மதம் மாறினல் அவரைத் திருமணம் செய்துக் கொள்வேன் என கூறி உள்ளார்.

அது மட்டுமின்றி மோசின் இந்துவாக மதம் மாறும் வரை தனது வீட்டுக்கு போக மாட்டேன் என தெரிவித்த பூஜா ஜோஷி அது வரை தனது உறவினர் வீட்டில் தங்கப் போவதாக  நீதிபதியிடம் தெரிவித்துள்ளார்.  காவல் துறை அதிகாரி, “பூஜா மைனர் பெண் அல்ல.  அவர் எங்கு வசிக்க வேண்டும் என்பதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும்.  நாங்கள் சட்டப்படி செய்ய வேண்டியதை செய்வோம்” என தெரிவித்துள்ளார்.  பூஜா ஜோஷி தனது குடும்ப உறுப்பினர்களுடனும்,  செய்தியாளர்களிடமும் எதுவும் பேச மறுத்து விட்டார்.