பெங்களூரு:

நடிகர் கமல்ஹாசல் கருத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாடு முழுவதும் இந்து தீவிரவாதம் பரவியுள்ளது என்று கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார்.

‘‘கடந்த காலங்களில் இந்து ஆதரவு அமைப்புகள் வன்முறையில் ஈடுபட்டது கிடையாது. எதிர்கட்சிகளும் விவாதங்களை பேச்சுவார்த்தை மூலம் நடத்தினர். இந்த பழைய நடைமுறை தற்போது தோற்றுவிட்டது. அவர்கள் ஆள் பலத்தை காட்டத் தொடங்கிவிட்டனர். வன்முறையில் ஈடுபட தொடங்கிவிட்டனர்’’ என்று நடிகர் கமல் ஒரு வாரப் பத்திரிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. அவரை சுட்டுக் கொல்ல வேண்டும் என்று கூட கருத்துக்கள் எழுந்தது. இதற்கிடையின் கமல் மீது உ.பி.மாநிலத்தில் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அவருக்கு ஆதரவாக கர்நாடகா மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் தினேஷ் குண்டுராவ் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் தினேஷ் பேட்டி அளித்துள்ளார். அதில், ‘‘ ஆம் இந்து தீவிரவாதம் உள்ளது. நாட்டில் அடிப்படைவாதம் உள்ளது. அதை கண்டு நாம் ஓடக்கூடாது. அதை நாம் எதிர்கொள்ள வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.