உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 2 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் பரவி வருகிறது.

இதனைத் தடுக்க மத்திய அரசும், பல்வேறு மாநில அரசுகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றன. தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று 3 பேருக்கு இருப்பதை உறுதி செய்துள்ளது தமிழக அரசு.

ஹிப் ஹாப் தமிழா தனது யூ டியூப் சேனலில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில்

இந்தியாவின் பொருளாதாரம் மட்டுமல்ல உலக அளவில் பொருளாதாரம் அடிவாங்கியுள்ளது. இந்த கரோனா வைரஸுக்கு இன்னும் எந்தவொரு மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை.

உங்கள் உடல்நிலை நல்லபடியாக இருந்தாலும் வெளியே செல்லும்போது இந்த வைரஸ் உங்களுக்குப் பரவும். அதனைத் தொடர்ந்து நீங்கள் வீட்டுக்கு வந்தவுடன் உங்களுடைய பெற்றோர், குழந்தைகளுக்கும் பரவிவிடும்.

அரசாங்கம் வெளியிடும் அதிகாரபூர்வ தகவல்கள் WHO இணையத்தில் இருக்கும். அதிலிருந்து பாருங்கள். இரவு – பகல் பாராமல் கரோனா தொற்றைத் தடுக்க உழைத்துக் கொண்டிருக்கும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு ஒரு சல்யூட்”.என தெரிவித்துள்ளார் ஹிப் ஹாப் தமிழா .