நாக்பூர்: நாக்பூரில் வரும் 29ம் தேதி அன்று அலுவலகங்கள், சந்தைகள், உணவகங்கள் உள்ளிட்டவை மூடப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு  வெளியிட்டுள்ளது.

மக்களின் அத்யாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் கடைகளான காய்கறி மற்றும் இறைச்சிக் கடைகள் மட்டும் மதியம் 1 மணி  வரை இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் நாக்பூரில் ஹோலி கொண்டாட்டங்களுக்குத் தடை விதித்து உள்ளதுடன் பொது மற்றும் தனியார் இடங்களில் மக்கள் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நாக்பூரில் நேற்று ஒரேநாளில் மட்டும் 3,579 பேருக்கு  கொரோனா தொற்று உறுதியானது.  47 பேர் கொரோனாவுக்கு பலியாகினர் என்பது  குறிப்பிடத்தக்கது.