டெல்லி:
ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வீடு கட்ட ரூ. 12 லட்சம் வரை கடன் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
பணமதிப்பிறக்கத்திற்கு வழங்கப்பட்ட கெடு நேற்றுடன் முடிந்தது. இந்நிலையில புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு நேற்று உரையாற்றினார். அதன் சிறப்பம்சங்கள்:
ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு ரூ 9 லட்சம் வரை வீட்டு கடன் வழங்கப்படும். இதில் 4 சதவீதம் வரை வட்டியில் தள்ளுபடி வழங்கப்படும். அதேபோல் ரூ. 12 லட்சம் வரையிலான கடன் தொகையின் வட்டியில் 3 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும்.
ஊழலை ஒழிக்க ஏழைகள் நலம் பெற திட்டம்..
-நேர்மை மரபு காப்பாற்றப்பட்டுள்ளது..
-ஊழலை ஒழிக்கும் மனநிலையில் மக்கள்..
-கிராமங்களில் குறை சரி செய்யப்படும்..

வங்கிகள் விரைவில் இயல்பு நிலைக்கு வரும்..
-சில ஆண்டுகளாக ரூ500, ரூ1,000 கறுப்பு பணமாக இருந்தது..
-ஏழைகளின் உரிமைகளை கறுப்பு பணம் பறித்தது..

ரூ500, ரூ1000 நோட்டுகளை வைத்து தனி பொருளாதாரம் செயல்படுகிறது..
-கறுப்பு பணம், கள்ளச்சந்தை, விலைவாசியால் மக்கள் பாதிப்புதவறு செய்த வங்கி அதிகாரிகளை விட்டுவைக்கமாட்டோம்…
-சாமானிய மக்களுக்கும் அதிகாரம் கிடைக்க வேண்டும்..
-நேர்மையற்றவர்களை திருத்துவோம்…

நேர்மையானவர்களை ஊக்குவிப்போம்…

தீயசக்திகள் நாட்டில் ஊடுருவுவதை தடுக்க வேண்டும்…
-சிலர் தவறான தகவல்களை பரப்புகின்றனர்…
-ரூ10 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளது என 24 லட்சம் பேர்தான் ஒப்புக் கொள்கின்றனர்…
-அரசு எடுத்த நடவடிக்கை வருங்காலத்துக்கு மிகவும் பயன் தரும்..

நாட்டு மக்கள் துன்பத்தில் இருந்து வெளியே வர காத்திருந்தனர்…

100 கோடி இந்தியர் தைரியத்துக்கு பாராட்டு..
-ஊழல், கறுப்பு பணம் நல்லவர்களை வீழ்த்தும்..
-பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு ஆதரவுக்கு நன்றி…
-தீபாவளிக்கு பின் தூய்மைக்கான யாகம்…
-தீமையை அழிக்க மக்கள் சபதம் ஏற்றால் விளைவு நன்றாக இருக்கும்…

நவம்பருக்கு பின் புதிய சவால்கள்…

ஊழல் பிரச்சனைகளை அகற்ற போராடுகிறோம்…

பணமதிப்பிழப்பால் மக்களிடையே விழிப்புணர்வு…
-பணமதிப்பிழப்பை சிலர் அரசியலாக்குகின்றனர்..