சென்னை: காஷ்மீர் மாநிலம் லடாக் லே பகுதியில் உள்ள இந்தியா -சீனா எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட விருப்பம் உள்ளவர்கள் குறித்து தமிழக போலீசாருக்கு, மத்திய உள்துறை அழைப்பு விடுத்துள்ளது.
இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே லடாக் பகுதியில் நடந்த மோதலுக்கு பிறகு கடந்த சில மாதங்களாக போர்பதற்றம் நீடித்து வருகிறது. தற்போதும் அங்கு இருதரப்புகளும் அங்கு படை களை குவித்துள்ளன. பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும், அமைதிக்கான சூழல் தென்படவில்லை.
இந்தநிலையில், லடாக் எல்லையில் பாதுகாப்புபணியில் ஈடுபடுவதற்காக, மாநில காவல்துறை யில் ஆயுதப்படை பிரிவில் விருப்பமானவர்கள் குறித்து தகவல் தெரிவிக்க மத்திய உள்துறை, மாநில காவல்துறையினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆவடி உள்பட 15 இடங்களில் போலீஸ் பட்டாலியன் பிரிவு உள்ளது. இந்த படைப் பிரிவில் உள்ளவர்கள் யாரும் லடாக் பகுதியில் பணியாற்ற விரும்பினால், அவர்கள் பெயரை தெரிவிக்கும்படி யும், ஒரு மாதம் அவர்களுக்கு அங்கு பணி வழங்கப்படும் என்றும் தமிழக காவல்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.