ஹாங்காங்

ஹாங்காங்கின் மிகப் பெரிய செல்வந்தராக இருந்த பெண் பங்குச் சந்தை சரிவால் தனது செல்வத்தில் பாதிக்கு மேல் இழந்துள்ளார்.

ஹாங்காங்கின் மிகப் பெரிய செல்வந்தர் என அறியப்பட்ட பெண் போலியானா சூ.   இவர் தனது பணத்தை பங்கு சந்தையில் முதலீடு செய்துள்ளார்.    அவர் முதலீடு செய்துள்ள நிறுவனமான கிங்ஸ்டன் ஃபைனான்சியல் குரூப் முதலீடு மற்றும் கடன் அளித்தல் போன்ற வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தது.

அந்த நிறுவனத்துக்கு ஏற்பட்ட நஷ்டத்தின் காரணமாக அந்த நிறுவனத்தின் பங்கு மதிப்புகள் குறைந்தன.   முந்தைய விலையை விட தற்போது அந்த பங்குகள் 52% விலை மதிப்பில் உள்ளது.   இதனால்  போலியானாவின் ரூ, 78121 கோடி மதிப்பிலான பங்குகள் பாதிக்கும் மேல் குறைந்து விட்டது.

போலியானா ஹாங்காங்கின் மிகப் பெரிய செல்வந்தர் என்னும் தகுதியை இழந்துள்ளார்.   இந்த வருடம் ஜனவரி மாதம் ஹாங்காங் பங்குச் சந்தை இந்த நிறுவனத்தின் பங்குகள் சரிந்து வருவதைக் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத் தக்கது.