ஹாங்காங்:

ஹாங்காங்கில் இரண்டடுக்கு பேருந்து கவிழ்ந்து 18 பேர் பலியாகினர்.

சீனா நாட்டின் ஹாங்காங் தை போ நகரில் வேகமாக சென்ற இரட்டை அடுக்கு பேருந்து ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதில் 18 பயணிகள் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

இதில் 15 பேர் ஆண்கள், 3 பேர் பெண்கள்.காயமடைந்த 50 பேர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.