ஐநா:

காஷ்மீர் மாநிலம் காதுவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். நாடு முழுவதும் இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எதிர்கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் இதை கண்டித்துள்ளனர். இந்நிலையில் இந்த விவகாரம் ஐக்கிய நாடுகள் சபையில் எதிரொலிதுள்ளது.

ஐநா தலைவர் அன்டோனியா கட்டர்ஸ் இச்சம்பவத்தை கொடூரமான கொலை என்று கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவரது செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘மீடியாக்கள் வாயிலாக இந்த கொடூர சம்பவம் குறித்து அறிந்தோம். சிறுமி கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். இந்த பாதக செயலில் ஈடுபட்டவர்களை அதிகாரிகள் சட்டத்தின் முன் நிறுத்துவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. ’’ என்று தெரிவித்துள்ளார்.