மதுரை:

துரையில் நேற்று இரவு ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொலை சம்பவம் தொடர்பான அவரது மனைவியிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

கொலை செய்யப்பட்ட ரஞ்சித்குமார்

மதுரை எஸ் எஸ் காலனியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரான ரஞ்சித்குமார். இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, மனைவி சுபாவை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று இரவு தனது வீட்டின் அருகே நண்பர்களுடன் ரஞ்சித் குமார் பேசிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த மர்ம கும்பல் ரஞ்சித் குமாரை சரமாரியாக வெட்டியும், அவரது ஆணுறுப்பை துண்டித்தும் சென்றனர்.

இதில் படுகாயமடைந்த ரஞ்சித்குமாரை அருகில் உள்ளவர்கள்  மீட்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், அவர்  சிகிச்சை பலனின்றி இன்று காலை  உயிரிழந்தார்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ரஞ்சித் குமார் கொலைக்கு அவரது மனைவிதான் காரணம் என்று அவரது உறவினர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதையடுத்து,  கொலை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் எஸ். எஸ். காலனி போலீசார், ரஞ்சித்குமார் மனைவி சுபாவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

-பொதிகை குமார்