இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை பாகுபாடு இல்லாமல் அனைவரையும் தாக்குகிறது .

அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், ராஜமெளலி, ஐஸ்வர்யா அர்ஜுன் உள்ளிட்ட பலர் முழுமையாக கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். சிலர் கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலும், அதை வெளியே சொல்லாமலே வீட்டில் தனிமைப்படுத்திக் குணப்படுத்திக் கொண்டுள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக பாடகர் எஸ்பிபிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் தனக்கு லேசான காய்ச்சல் மற்றும் சளி இருப்பதாக தெரிவித்தார்.

இந்நிலையில் அவர் அனுமதிக்கப்பட்டுளள்ள மருத்துவமனையில் இருந்து அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதில், எஸ்.பி.பாலசுப்ரமண்யத்திற்கு தற்போது லேசான கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருந்ததாகவும், ஆக்ஸிஜன் செறிவு நார்மலாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் உயர்மட்ட மருத்துவக்குழு கண்காணித்து வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.